உலகம்

குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத மற்​றும் குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட 1 லட்​சத்​துக்கும் மேற்​பட்​ட​வர்​களின் விசாக்​களை அமெரிக்க அரசு ரத்து செய்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலை​மை​யில் ஆட்சி அமைந்த பிறகு, சட்​ட​விரோத​மாக நுழைந்​தோருக்கு எதி​ராக மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதன் பிறகு சட்​டப்​பூர்​வ​மாக விசா எடுத்து வரு​வோர் மீதும் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

இந்​நிலை​யில் கடந்த ஆண்​டில் மட்​டும் 8 ஆயிரம் மாணவர்​கள் உட்பட ஒரு லட்​சம் பேரின் விசாக்​கள் ரத்து செய்​யப்​பட்டது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்பதாவது: 8 ஆயிரம் மாணவர் விசாக்​கள் மற்​றும் குற்றச் செயல்​களில் ஈடு​பட்டு போலீ​ஸாருடன் மோதலில் ஈடு​பட்ட 2,500 தனி​நபர் விசாக்​கள் உள்​ளிட்ட 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​களின் விசாக்​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன. அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்​படு​வார்​கள்.

தேசத்​தின் பாது​காப்பை வலுப்​படுத்​த​வும் குடியேற்ற சட்​டங்​களை அமல்​படுத்​த​வும் நடந்து வரும் முயற்​சிகளின் ஒரு பகு​தி​யாக இந்த ​நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது. தாக்​குதல், திருட்​டு, மது அருந்​தி​விட்டு வாக​னம் ஓட்​டு​தல் போன்ற குற்​றங்​களுக்​காக இது​போல விசா ரத்து செய்​யப்​பட்டு நாடு​ கடத்​தல் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

தாக்​குதல் காரண​மாக 30% விசாக்​கள், திருட்​டு, குழந்தை துஷ்பிரயோகம் தொடர்​பாக 20% விசாக்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. சுமார் 500 மாணவர்​களின் விசாக்​கள் போதைப்​பொருள் வைத்​திருந்த குற்​றங்​களுக்​காக​ ரத்து செய்​யப்​பட்​டன. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

விசாக்​களு​டன் அமெரிக்கா​வுக்கு வந்​தவர்​கள், நாட்​டில் தங்​கி​யிருக்​கும்​போது, தேவை​யான அனைத்து சட்​ட ரீ​தி​யான விஷ​யங்​களுக்கு உட்​பட்டே நடந்து கொள்ள வேண்​டும். அதிபர் ட்ரம்​பின் நிர்​வாகம் இதனை கடுமை​யாக கடைப்​பிடித்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யிலேயே நடவடிக்கை பாய்ந்​துள்​ளது.

SCROLL FOR NEXT