வாஷிங்டன்: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்தது. இவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் “கொலம்பியா அதிபர் கஸ்டவோ பெட்ரோவும், கொக்கைன் போதைப் பொருள் தயாரித்து அமெரிக்காவில் விற்கிறார். அவரால் இதை நீண்ட காலத்துக்கு செய்ய முடியாது” என கொலம்பியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, "கொலம்பியா அதிபர் கஸ்டவோ பெட்ரோவுடன் போனில் பேசினேன். போதைப் பொருள் நிலவரம், இரு நாடுகள் இடையே நிலவும் வேறு பிரச்சினைகள் குறித்து விளக்குவதற்காக அவர் என்னிடம் பேசினார். அவரை நான் விரைவில் வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளேன்” என்றார்.