உலகம்

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பில் ராணுவ உயர் அதிகாரி உயிரிழப்பு - உக்ரைன் மீது சந்தேகம்

செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று நடை​பெற்ற கார் குண்டு வெடிப்​பில் ரஷ்ய ராணுவ உயர் அதி​காரி உயிரிழந்தார்.

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்​தின் இயக்​குன​ராக இருப்​பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்​வாரோவ். இவரது காரில் வைக்கப்​பட்ட குண்டு நேற்று வெடித்​துச் சிதறியது. இதில் சர்வாரோவ் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து ரஷ்ய புல​னாய்வு அதிகாரி​கள் பல கோணங்​களில் விசா​ரணை நடத்தி வருகின்றனர். இந்த சதி​யில் உக்​ரைன் சிறப்புப் படை​யினர் ஈடுபட்​டிருக்​கலாம் என ரஷ்ய புல​னாய்வு அதி​காரி​கள் சந்தேகிக்கின்​றனர்.

ரஷ்யா - உக்​ரைன் இடையே போர் நிறுத்​தத்தை ஏற்​படுத்த அமெரிக்கா​வின் புளோரிடா நகரில் ரஷ்யா மற்​றும் அமெரிக்க அதிகாரிகளிடையே பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்​நிலை​யில், ரஷ்​யா​வில் நடை​பெற்ற கார் குண்டு வெடிப்​பில் அந்நாட்டு ராணுவ உயர் அதி​காரி கொல்லப்பட்​டுள்​ளார். ரஷ்​யா​வும் உக்​ரைன் மீதான தாக்​குதலை நிறுத்​த​வில்​லை. உக்​ரைனின் ஒடேஷா துறை​முகத்தை ரஷ்ய ஏவுகணை தாக்​கிய​தில் 8 பேர் உயி​ரிழந்​தனர் 27 பேர் கா​யம்​ அடைந்​தனர்​.

SCROLL FOR NEXT