ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

 
உலகம்

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மாஸ்கோ: உக்​ரைன் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​து​வோம் என்று ரஷ்யா பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. கடந்த வியாழக்​கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே அமைந்​துள்ள கச்சா எண்​ணெய் கிடங்கு மீது ஒரே நேரத்​தில் சுமார் 200-க்​கும் மேற்​பட்ட உக்​ரைன் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில் எண்​ணெய் கிடங்கு முழு​மை​யாக தீப்​பிடித்து எரிந்​தது.

இதுகுறித்து ரஷ்ய வெளி​யுறவு அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் கூறும்​போது, “மீண்​டும் ஒரு தீவிர​வாத தாக்​குதலை உக்​ரைன் நடத்தி உள்​ளது. இதற்கு பதிலடி​யாக உக்​ரைன் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​து​வோம். இந்த தாக்​குதல்​கள் உக்​ரைன் படைகளை நிலைகுலை​யச் செய்​யும்” என்று தெரி​வித்​தார்.

ரஷ்ய ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: உக்​ரைனுக்கு எதி​ரான போரில் ரஷ்யா நிதானத்தை கடை​ப்பிடித்து வரு​கிறது. உக்​ரைனின் அத்​து​மீறல்​கள் தொடர்ந்​தால் அந்த நாட்​டின் அனைத்து உள்​கட்​டமைப்​பு​களும் தரைமட்​ட​மாக்​கப்​படும். முக்​கிய சாலைகள், ரயில் பாதைகள், பாலங்​கள், சுரங்​கப்​பாதைகள், ரயில் நிலை​யங்​கள், விமானநிலை​யங்​கள் தகர்க்​கப்​படும். அனைத்து முனை​களி​லும் போரை தீவிரப்​படுத்​து​வோம். உக்​ரைன் மீது அலை, அலை​யாக தாக்​குதல் நடத்​தப்​படும்.

இவ்​வாறு ரஷ்ய ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கூறும்​போது, “எங்​கள் நகரங்​கள் மீது தீவிர தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்​றன. இதற்கு பதிலடி​யாகவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்​ளிட்ட நகரங்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதலை நடத்தி உள்​ளோம். எங்​களுக்கு ஆதரவு அளிக்​கும்​ ஐரோப்​பிய நாடு​களுக்​கு நன்​றி” என்​று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT