புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடம். (உள்படம்) ஹம்சா புர்ஹான்

 
உலகம்

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புல்​வாமா தாக்​குதலில் மூளை​யாக செயல்​பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் சுட்​டுக் கொன்​றனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா மாவட்​டத்​தில் ஜம்​மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை​யில் கடந்த 2019ம் ஆண்டு சிஆர்​பிஎப் வீரர்​களை ஏற்​றிச் சென்ற வாக​னத்​தின் மீது வெடிபொருட்​களை ஏற்றி வந்த வாக​னம் ஒன்று மோதி பயங்​கர​மாக வெடித்​தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்​கள் உயி​ரிழந்​தனர். வெடிபொருட்​கள் ஏற்றி வந்த வாக​னத்தை எடுத்​துச் சென்​றது ஜெய்​ஸ்​-இ-​முகமது என்ற தீவிரவாத அமைப்​பைச் சேர்ந்த அடீல் அகமது தர் என்​பது தெரியவந்​தது.

இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​டது புல்​வாமா மாவட்​டத்​தின் கர்​பத்​போரா பகு​தி​யைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஹம்சா புர்ஹான் என தெரிய​வந்​தது. இவர் அல் பத்ர் என்ற தீவிர​வாத இயக்​கத்​தைச் சேர்ந்​தவர். இச்​சம்​பவத்​துக்​குப்​பின் ஹம்சா புர்ஹான் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்கு தப்​பிச் சென்​று​விட்​டார்.

இவரை சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்பு சட்​டத்​தின் (ஊபா) கீழ் தீவிர​வா​தி​யாக மத்​திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறி​வித்​தது. இந்​நிலை​யில் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் முசாப​ரா​பாத் பகு​தி​யில், ஹம்சா புர்ஹான் மீது அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் துப்​பாக்கி சூடு நடத்​தி​விட்டு தப்​பிச் சென்​றனர். இதில் ஹம்சா புர்ஹான்​ இறந்​தார்​.

SCROLL FOR NEXT