உலகம்

ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் மோடிக்கே முதலிடம்: அமெரிக்க தூதர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்​திக்க விரும்​பும் தலைவர்​களில் பிரதமர் நரேந்​திர மோடியே முதலிடத்​தில் உள்ளார் என்று இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: வரும் டிசம்​பரில் ஜி20 நாடு​களின் உச்சி மாநாடு அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், டோரல் நகரில் நடை​பெற உள்​ளது.

இந்த மாநாட்​டில் 35-க்​கும் மேற்​பட்ட நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர். அப்​போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்​திக்க விரும்​பும் தலை​வர்​களில் பிரதமர் நரேந்​திர மோடியே முதலிடத்​தில் உள்​ளார்.

இந்​திய பிரதமர் மோடியை தனது நெருங்​கிய நண்​ப​ராக அதிபர் ட்ரம்ப் கருதுகிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் அவர் இந்​தி​யா​வில் அரசு முறை பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவருக்கு அளிக்​கப்​பட்ட சிறப்​பான வரவேற்பை இப்​போதும் அவர் நினை​வு​கூர்​கிறார். அடுத்த ஆண்​டில் அதிபர் ட்ரம்ப் இந்​தி​யா​வில் அரசு முறை பயணம் மேற்​கொள்ள அதிக வாய்ப்பு உள்​ளது.

அமெரிக்க உச்ச நீதி​மன்ற தீர்ப்​பால் அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. எனினும் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வ​தில் கடைசி கட்​டத்தை நெருங்கி உள்​ளோம். அநேக​மாக அடுத்த சில மாதங்​களில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் ஓராண்டாக இழுத்​தடிக்​கப்​படு​கிறது என்று சிலர் கூறுகின்​றனர்.

அமெரிக்கா​வுக்​கும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துக்​கும் இடையே சுமார் 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக வர்த்தக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. ஆனால் இருதரப்பு ஒப்​பந்​தம் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. இந்​தி​யா​வுட​னான பேச்​சு​வார்த்​தை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த ஒப்​பந்​தம் இரு நாடு​களுக்​கும் பயன் அளிப்​ப​தாக இருக்​கும்.

பிரதமர் மோடி தலை​மையி​லான ஆட்​சி​யில் இந்​தி​யா​வில் ஸ்திரத்​தன்மை ஏற்​பட்​டிருக்​கிறது. வலு​வான இந்​தியா உடனான உறவை வலுப்​படுத்த அமெரிக்கா விரும்​பு​கிறது. இந்​திய தரப்​பில் அமெரிக்​கா​வில் அண்​மை​யில் 24 பில்​லியன் டாலர் முதலீடு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதே​போல அமெரிக்க நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் தங்​கள் கிளை​களை விரி​வாக்​கம் செய்து வரு​கின்​றன.

பாது​காப்​புத் துறை​யில் அமெரிக்​கா​வின் மிக நெருங்​கிய நட்பு நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. எங்​களது ஆயுதங்​களை அனைத்து நாடு​களுக்​கும் விற்​பனை செய்ய நாங்​கள் விரும்பவில்லை. குறிப்​பிட்ட சில நாடு​களுக்கு மட்​டுமே விற்​பனை செய்ய விரும்​பு​கிறோம். அந்த ஒரு சில நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்​று.

அமெரிக்​கா, ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா, இந்​தியா ஆகிய நாடு​கள் ஒன்​றிணைந்து குவாட் கூட்​டமைப்பை உரு​வாக்கி உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் அடுத்த கூட்​டம் ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் நடை​பெற உள்​ளது. இந்த கூட்​டத்​தில் 4 நாடு​களின் தலை​வர்​களும் பங்​கேற்​பார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்வாறு அமெரிக்​க தூதர்​ செர்​ஜியோ கோர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT