டாக்கா: வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலையை தொடர்ந்து இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.
இதில் மைமன்சிங் பகுதியில் கடந்த 18-ம் தேதி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து அம்ரித் மோண்டல் என்ற இந்து இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சக ஊழியர் நோமன் மியா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பியோடிய நோமன் மியாவை போலீஸார் கைது செய்தனர். வங்கதேசத்தில் 2 வாரங்களில் இந்துக்களுக்கு எதிரான 3-வது கொலை சம்பவம் இதுவாகும்.