உலகம்

வெளிநாட்டினருக்கு லாட்டரி கிரீன் கார்டு முறை ரத்து: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: லாட்​டரி கிரீன் கார்ட் முறையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

அமெரிக்க நாட்​டில் தற்​போது லாட்​டரி கிரீன் கார்ட் முறை பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. வெளி​நாட்​டில் இருந்து அமெரிக்கா​வுக்கு வந்​துள்​ளவர்​கள் கிரீன் கார்ட் கோரி விண்​ணப்​பம் செய்​வர். அதாவது ஒவ்​வொரு ஆண்​டும் 50,000 கிரீன் கார்ட் அமெரிக்க அரசு சார்​பில் வழங்​கப்​படும்.

ஆனால், இந்த எண்​ணிக்​கையை தாண்டி அதிக அளவி​லான நபர்​கள் கிரீன் கார்ட் கோரி விண்​ணப்​பிக்​கும்​போது கம்ப்​யூட்​டர் அடிப்​படையி​லான லாட்​டரி மூலம் கிரீன் கார்ட் வழங்​கப்​படும். அதாவது கம்ப்​யூட்​டரே, லாட்​டரி குலுக்​கல் அடிப்​படை​யில் இந்த 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து அறிவிக்​கும்.

இந்த கிரீன் கார்ட் பெறு​பவர்​கள் அமெரிக்​கா​வின் குடி​யுரிமை​யைப் பெற்​ற​தாக அறிவிக்​கப்​படு​வர். இந்த லாட்​டரி கிரீன் கார்ட் முறையை அதிபர் ட்ரம்ப் கடுமை​யாக எதிர்த்து வந்​தார். இந்​நிலை​யில் லாட்​டரி கிரீன் கார்ட் முறை ரத்து செய்​யப்​படு​வ​தாக நேற்று முன்​தினம் அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அமெரிக்க உள்​நாட்டு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் கிறிஸ்டி நோயம் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: லாட்​டரி மூலம் கிரீன் கார்ட் வழங்​கும் முறை​யின் மூலம் அமெரிக்​கா​வில் நுழைந்​தவர்​கள்​தான் பிர​வுன் பல்​கலைக்​கழகம், எம்​ஐடி-​யில் நடந்த துப்​பாக்​கிச் சூடு சம்​பவங்​களுக்கு காரண​மாக இருந்​தனர். எனவே, இனி அது​போன்ற சம்​பவங்​கள் நிகழாமல் தடுக்க லாட்​டரி கிரீன் கார்ட் முறை ரத்து செய்​யப்​படு​வ​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இதற்​கான உத்​தரவு அமெரிக்​கக் குடி​யுரிமை மற்​றும் குடியேற்​றப் பிரிவு அமைச்​சகத்​துக்கு சென்​றுள்​ளது. கொடூரச் செயல் புரி​யும் நபர்​களை இனி எங்​கள் நாட்​டில் அனு​ம​திக்​க​மாட்​டோம். இவ்​வாறு அமைச்​சர் கிறிஸ்டி நோயம் தெரி​வித்​தார்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் நீட்டிப்பு: கடந்த 2015-ம் ஆண்​டில் இந்​தி​யா, அமெரிக்கா ஆகிய இரு நாடு​களிடையே பாது​காப்பு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. அப்​போது இந்​தி​யாவை மிக முக்​கிய பாது​காப்பு ஒத்​துழைப்பு நாடு என அமெரிக்கா அங்​கீகரித்து ராணுவ தளவாடங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை பகிரத் தொடங்​கியது. இந்த ஒப்பந்​தம் தற்​போது நிறைவடைய​வுள்ளது. இதைத் தொடர்ந்து

இரு நாடு​களும் கடந்த மாதம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் புதிய ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளன. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இந்​தி​யா​வுடன் பாது​காப்​புத்​ துறை ஒப்​பந்​தத்தை நீட்​டிக்க வகை செய்​யும் மசோ​தா​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். சீனா முன்​வைக்​கும் சவாலை எதிர்​கொள்​வதற்கு குவாட் அமைப்பு மூலம் அமெரிக்​கா​வின் ஈடு​பாட்டை விரிவுபடுத்​த​வும் இந்த மசோதா வகை செய்​கிறது.

SCROLL FOR NEXT