அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டார்.

 
உலகம்

ஈரான் மீதான போர் முடிவுக்கு வருமா? - இஸ்லாமாபாத்தில் இன்று பேச்சுவார்த்தை

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தலைமையில் குழு விரைந்தது

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இரு தரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினர் பாகிஸ்​தான் விரைந்​துள்​ளனர். ஈரான் தரப்​பில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்த நிலை​யில், கடந்த 8-ம் தேதி தற்​காலிக போர்​நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. இதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை இன்று நடை​பெறுகிறது.

          

இதில் அமெரிக்கா தரப்​பில் துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோ​ரும், ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, வெளி​யுறவு துணை

அமைச்​சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோ​ரும் பங்​கேற்​கின்​றனர். சமரச தூதர்​களாக பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவு அமைச்​சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்​ளனர்.

ட்ரம்ப் எச்சரிக்கை: ‘நியூ​யார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், “ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை முடிவு​கள் அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் தெரிய​வரும். எங்​களு​டன் ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யா​விட்​டால், ஈரானுக்கு மோச​மான விளைவு​கள் ஏற்​படும். எங்​களது போர்க் கப்​பல்​களில் அதிநவீன ஆயுதங்​களை ஏற்றி வரு​கிறோம். ஒப்​பந்​தம் ஏற்​ப​டா​விட்​டால் அந்த ஆயுதங்​களை பயன்​படுத்​து​வோம்’’ என்று தெரி​வித்​தார்.

பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் புறப்​பட்​டார். ‘‘ஈ​ரானுடன் பேச வேண்​டிய விவ​காரங்​கள் குறித்து அதிபர் ட்ரம்ப் தெளி​வான வழி​காட்​டு​தல் வழங்​கி​யுள்​ளார். அதன்​படி பேச்​சு​வார்த்தை நடத்​து​வேன். எங்​களோடு ஈரான் விளை​யாட முயன்​றால் மோச​மான விளைவு​கள் ஏற்​படும்’’ என்று அவர் கூறி​னார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தளப் பதி​வில், ‘லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்​குதல் நடத்திவரு​கிறது. இது போர்​நிறுத்த ஒப்​பந்த மீறல் ஆகும். தாக்​குதலை உடனே நிறுத்த வேண்​டும். நாங்​கள் மீண்​டும் துப்​பாக்​கியைத் தூக்க தயங்க மாட்​டோம். எந்த சூழலிலும் லெப​னான் மக்​களைக் கைவிட​மாட்​டோம்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி நேற்று கூறும்​போது, ‘‘தற்​காலிக போர்​நிறுத்த ஒப்​பந்​தப்​படி, அனைத்து முனை​களி​லும் போரை நிறுத்த அமெரிக்​கா, இஸ்​ரேல் ஒப்​புக்​கொண்​டுள்​ளன. ஆனால், லெப​னான் மீது இஸ்​ரேல் ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. தாக்​குதலை உடனடி​யாக நிறுத்​தா​விட்​டால், பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க மாட்​டோம்’’ என்​றார்.

ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் கூறும்​போது, “ஈரானின் நட்பு நாடு​கள், அமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​ப​டாது என்று தற்​காலிக அமைதி ஒப்​பந்​தத்​தின் 1, 10-வது பிரிவு​களில் கூறப்​பட்​டுள்​ளது. இதை பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்​க​மாக​வும் அறி​வித்​தார். ஒப்​பந்​தத்தை மீறி​னால் தகுந்த பதிலடி கொடுப்​போம்’’ என்​றார்.

லெப​னான் மீதான தாக்​குதல் நிறுத்​தம்: இதற்​கிடையே, லெப​னான் மீதான தாக்​குதல்​களை குறைத்​துக் கொள்​ளு​மாறு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​விடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிப்​பட்ட முறை​யில் வலி​யுறுத்​தி​ய​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதையடுத்​து, லெப​னான் மீதான தாக்​குதலை இஸ்​ரேல் தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டில் நேற்று வான்​வழித் தாக்​குதல்​கள் ஏதும் நடத்​தப்​பட​வில்லை என்று கள நில​வரங்​கள் கூறுகின்​றன. இதற்​கிடையே, லெப​னானுடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த இஸ்​ரேல் ஒப்​புக்​கொண்​டது. லெப​னான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​பட்​ட​தால் இந்த பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க ஈரான் பிர​தி​நி​தி​களும் சம்​மதம் தெரி​வித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT