உலகம்

சிகிச்சை அளிக்க 8 மணி நேரம் தாமதமானதால் கனடா மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

எட்​மாண்​டன்: கனடாவில் இந்​தி​யர் பிர​சாந்த் ஸ்ரீகு​மார் (44) பணிபுரிந்து வந்தார். கடந்த 22-ம் தேதி பணி​யில் இருந்​த​போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, அவர் உடனடி​யாக எட்​மாண்​டனில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு முதற்​கட்ட பரிசோதனை செய்த ஊழியர்​கள், அவசர சிகிச்​சைப் பிரி​வில் அமர வைத்​துள்​ளனர். நேரம் செல்​லச் செல்ல பிர​சாந்​தின் ரத்த அழுத்​தம் அதி​கரித்த நிலை​யில், அவருக்கு வெறும் ‘டைல​னால்’ மாத்​திரை மட்​டுமே வழங்கி உள்​ளனர்.

சுமார் 8 மணி நேரத்​துக்​குப் பிறகு, அவரை சிகிச்சை அறைக்​குள் அழைத்​தனர். அங்கு சென்ற 10 வினாடிகளி​லேயே, பிர​சாந்த் தனது நெஞ்​சைப் பிடித்​துக்​கொண்டு தரை​யில் சரிந்து விழுந்து உயி​ரிழந்​தார்.

இந்த மரணம் குறித்து தலைமை மருத்​து​வப் பரிசோதகர் அலு​வல​கம் விசா​ரணை நடத்தி வரு​வ​தாக, அந்த மருத்​து​வ​மனையை நிர்​வகிக்​கும் ‘கவனன்ட் ஹெல்த்’ அமைப்பு கூறி​யுள்​ளது. எனினும், தனிப்​பட்ட நோயாளி​யின் சிகிச்சை விவரங்​களைப் பகிர மறுத்​து​விட்​டது.

இதுகுறித்து அவருடைய தந்தை குமார் ஸ்ரீகுமார் கூறும்போது, “தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். அப்போது, “அப்பா எனக்கு மிகவும் வலிக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை” என்று அழுதார். அவரை சரியாக பரிசோதிக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர் ” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT