உலகம்

இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்: ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்​தோ​னேசி​யா​வில் ஐஐஎம் (பெங்​களூரு) வளாகம் அமைக்​கப்​படும் என்று அந்​நாட்டு தலைநகர் ஜகார்த்​தா​வில் பிரதமர் நரேந்​திர மோடி அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று அறி​வித்​தார். அத்​துடன், பாது​காப்​பு, கல்​வி, தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்​வெளித் துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்பட முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தோனேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். முதல் கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியந்​தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்​சாக​மாக வரவேற்று முப்​படை அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

அந்​நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்​தோவை தலைநகர் ஜகார்த்​தா​வில் உள்ள மெர்​டேகா மாளி​கை​யில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்​தச் சந்திப்​பின் போது, ‘‘இந்​தியா மற்​றும் இந்​தோ​னேசியா இடையி​லான இருதரப்பு உறவு​களில் ஒரு புதிய பொற்​காலம் இது’’ என்று பிரதமர் மோடி பெரு​மிதம் தெரி​வித்​தார்.

இந்​தி​யக் கல்​வியை உலகளா​விய ரீதி​யில் கொண்டு செல்​லும் முக்கிய முயற்​சி​யாக, புகழ்​பெற்ற ஐஐஎம் பெங்​களூரு கல்வி நிறுவனத்​தின் முதல் சர்​வ​தேச வளாகம் இந்​தோ​னேசி​யா​வில் நிறுவப்​படும் என்று பிரதமர் மோடி அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்தார். இது ஆசி​யான் பிராந்​திய மாணவர்​களுக்​குப் பெரிதும் உதவும்.

பிரம்​மோஸ் ஒப்​பந்​தம்

பாது​காப்​புத் துறை​யில் மிகப்​பெரிய மைல் கல்​லாக, இந்​திய - ரஷ்ய கூட்டு தயாரிப்​பான ‘பிரம்​மோஸ்’ க்ரூஸ் ஏவு​கணை​கள், இந்​தி​யா​வின் உள்​நாட்டு தயாரிப்​பான ‘அஸ்ட்​ரா’ வான் வழி ஏவு​கணை​களை இந்​தோ​னேசி​யா​வுக்கு வழங்​கு​வதற்​கான ஒப்​பந்​தங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. பிலிப்​பைன்​ஸைத் தொடர்ந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​யைப் பெறும் 2-வது ஆசி​யான் நாடு இந்​தோ​னேசியா என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தச் சந்​திப்​புக்​குப் பின்​னர் பிரதமர் நரேந்திர மோடி கூறும்​போது, ‘‘21-ம் நூற்​றாண்டு தொழில்​நுட்​பம் சார்ந்​தது. செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), தொலைத்​தொடர்​பு, ஸ்டார்ட்​-அப் சுற்​றுச்​சூழல் மற்​றும் டிஜிட்​டல் பொதுக் கட்​டமைப்பு ஆகிய​வற்​றில் இரு நாடு​களும் இணைந்து செயல்பட உடன்​பாடு எட்​டப்​பட்​டுள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.

மேலும், இரு நாடு​களின் டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனையை எளி​தாக்க, இந்​தி​யா​வின் ‘யுபிஐ’ கட்டண முறை, இந்​தோ​னேசி​யா​வின் கட்டண முறை​யுடன் இணைக்​கப்​பட​உள்​ளது. விண்​வெளித் துறை​யில் கூட்டு ஆராய்ச்சி மற்​றும் தொழில்​நுட்​பப் பகிர்​வும் பலப்​படுத்​தப்பட உள்​ளது.

உருக்கு உற்​பத்​திக்கு ஆலை

இந்​தி​யா​வின் ‘செ​யில்’ நிறு​வனம் மற்​றும் இந்​தோ​னேசி​யா​வின் ‘பிடி கிரக​டாவ் ஸ்டீல்’ நிறு​வனம் இணைந்து உருக்கு உற்​பத்​திக்கு புதிய ஆலையை இந்​தோ​னேசி​யா​வில் அமைக்​க​வுள்​ளன. தவிர, விநி​யோகச் சங்​கி​லியைப் பலப்​படுத்த முக்​கி​யத்தாதுக்​கள் மற்​றும் அரியவகை காந்​தங்​கள் தயாரிப்​பிலும் இரு நாடு​களும் கைகோத்து செயல்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் புகழ்​பெற்ற மதிய உணவுத் திட்​டம் மற்​றும் பொது விநி​யோகத் திட்​டம் போன்ற மக்​கள் நலத்​திட்​டங்​களின் அனுபவங்​களைப் பகிர்ந்து கொள்ள இரு நாடு​களும் ஒப்​புக்​கொண்​டுள்​ளன. உணவுப் பாது​காப்பை உறுதி செய்ய, இந்​திய விஞ்​ஞானிகளால் உரு​வாக்​கப்​பட்ட உயர்தர கோதுமை விதைகள் இந்​தோ​னேசி​யா​வுக்கு வழங்​கப்​பட​வுள்​ளன.

இந்​தப் பயணத்​தின் மூலம் இந்​தியா - இந்​தோ​னேசி​ய இடையி​லான உறவு புதி​ய கட்​டத்​தை எட்​டியுள்​ளது.

பிரதமருக்கு உயரிய விருது

இந்தோனேசிய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை அதிபர் பிரபோவோ சுபியந்தோ வழங்கி கவுரவித்தார். இந்த விருது இந்திய மக்களுக்கும், இரு நாடுகளின் நீண்ட கால நட்புறவுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய குடியரசின் ஒற்றுமை மற்றும் செழுமைக்காக சிறந்த முறையில் சேவையாற்றிய தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். இதற்கு முன்னதாக கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT