உலகம்

சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கிய 3 கப்பல்களை விடுவிக்க இறுதிகட்ட பேச்சு

செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்​கிய 3 சரக்கு கப்​பல்​கள் மற்​றும் அவற்​றில் உள்ள 44 மாலுமிகளை​ விடுவிப்​ப​து தொடர்பாக இறு​தி​க்கட்ட பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​கின்​றன.

சோமாலிய கடல் பகுதி மற்​றும் ஏடன் வளை​குடா வழி​யாக கடந்த ஏப்​ரல் மற்​றும் மே மாதங்​களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்​ணெய்க் கப்​பல்​களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்​பலும் சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​களால் கடத்​தப்​பட்​டன.

கடற்​கொள்​ளை​யர்​களை தடுப்​ப​தற்​காக சரக்கு கப்​பலில் உள்ள பாது​காப்பு ஊழியர்​கள் துப்​பாக்கி சூடு நடத்​துகின்​றனர். ஆனால், அதை​யும், மீறி கடற்​கொள்​ளை​யர்​கள் கப்​பலில் ஏறி கடத்தி விடுகின்​றனர். ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கிய​தில் இருந்​து, மேற்கு இந்​தி​யப் பெருங்​கடலில் சரக்கு கப்பல்கள் மீதான கடற்​கொள்​ளை​யர்​களின் தாக்​குதல் அதிகரித்துள்ளது.

கடத்​தப்​பட்ட 3 கப்​பல்​கள் மற்​றும் 44 மாலுமிகளை மீட்​ப​தற்​கான பேச்​சு​வார்​தை​யில் கப்​பல்​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நாடு​கள், கப்​பல் உரிமை​யாளர்​கள் மற்​றும் காப்​பீட்டு நிறு​வனங்​கள் ரகசிய பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக​ கப்​பல் போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. சட்ட சிக்​கல்​களைத் தவிர்ப்​ப​தற்​காக, ஐ.நா சபை, அமெரிக்கா, இங்​கிலாந்​து, மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றி​யம் ஆகிய​வற்​றால் பராமரிக்​கப்​படும் தடைப் பட்​டியல்​களு​டன் பிணைத் தொகை​யைப் பெறு​பவரின் அடை​யாளம் சரிபார்க்கப்படு​கிறது.

பிணை​த்​தொகை மனி​தாபி​மான அடிப்​படை​யில் செலுத்தப்பட்டாலும், தடைகள் குறித்த சர்​வ​தேச சட்​டங்​கள் மீறப்ப​டா​மல் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதனால் கடத்​தப்​பட்ட 3 கப்​பல்​களும், 44 மாலுமிகளும் விரை​வில் மீட்​கப்​படு​வர் எனத் தெரி​கிறது. இந்​தாண்​டில் கடந்த ஜுன் வரை ஆசிய கடற்​பகு​தி​யில் 35 கடற்​கொள்ளை சம்​பவங்​கள் நடைபெற்றுள்​ள​தாக சிங்கப்பூரில் செயல்​படும் ரீகேப் தகவல் பகிர்வு மையம் தெரிவித்துள்​ளது.

SCROLL FOR NEXT