உலகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடி விபத்து: சுவிட்சர்லாந்து விடுதியில் 40 பேர் பலி; 100+ காயம்

செய்திப்பிரிவு

பெர்ன்: சுவிட்​சர்​லாந்​தில் நடை​பெற்ற புத்​தாண்டு கொண்டாட்டத்​தின்​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் சிக்கி 40 பேர் பரி​தாப​மாக உயிரிழந்​தனர்.

புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து சுவிட்​சர்​லாந்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிரேன்​ஸ்​- மோன்​டனா நகராட்​சிக்கு உட்​பட்ட ஸ்கை ரிசார்ட்​டில் உள்ள லீகான்​ஸ்​டெல்​லேஷன் மது​பான மற்​றும் ஓய்வு விடு​தி​யில் புத்தாண்டை கொண்​டாடு​வதற்​காக 150-க்​கும் மேற்​பட்​டோர் கூடியிருந்​தனர்.

இசைக் கச்​சேரி நடந்​து​கொண்​டிருந்த போது திடீரென பெரிய வெடி​விபத்து ஏற்பட்​டது. இதில், 40 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 100-க்​கும் மேற்​பட்​டோர் மருத்துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்​வாறு அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

இந்த மது​பான விடு​தி​யில் இசைக் கச்சேரி​யின் போது வெடிகள் வெடிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. அப்​போது ​தான் பெரும் வெடி​விபத்து ஏற்பட்​டுள்ளது. வீடியோ வைரல் இருப்​பினும், இந்த சம்பவத்​துக்​கான உண்​மை​யான காரணம் இன்​னும் தெரியவில்லை என்று சுவிட்​சர்​லாந்து போலீ​ஸார் தெரிவித்துள்ளனர். வெடி​ விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரு​கிறது.

SCROLL FOR NEXT