நியூயார்க்: ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள எனது நண்பர், நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் உண்மையிலேயே ஒரு மாபெரும் தலைவர்.
அவர் மிகவும் வலிமையான வர், ஆரோக்கியமானவர், மற்றும் அறிவார்ந்த மனிதர். வரும் ஆண்டுகளிலும் அவர் இதேபோன்ற சாதனைகளை படைப்பார்” என கூறியுள்ளார். இதையடுத்து அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.