காந்தகார்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே துரந்த் எல்லைப் பகுதியில் பிரச்சினை நிலவுகிறது. இப்பகுதியில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் காந்தகார் நகரில் பாகிஸ்தான் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோகட் பகுதியில் உள்ள ராணுவ கோட்டை மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் கோகட் கோட்டை, இதன் அருகில் உள்ள துரந்த் எல்லை ராணுவ மையம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கன் தெரிவித்துள்ளது.