உலகம்

காங்கோவில் எபோலா பாதிப்பால் 80 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கின்ஷசா: மத்​திய ஆப்​பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, தற்​போது கடுமை​யான எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்​கொண்​டுள்​ளது.

பொது​வாகக் காணப்​படும் ‘ஜைர்' உரு​மாற்ற வைரஸை விட முற்​றி​லும் மாறு​பட்ட, மிக​வும் அரி​தான ‘புந்​திபு​கியோ' வகை வைரஸ் மூலமே இந்த நோய் பரவுவதை சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இந்த வைரஸ் பாதிப்​பால், கிழக்கு இட்​டுரி மாகாணத்​தில் இது​வரை 80-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர், மேலும் எபோலா வைரஸ் அறிகுறி உள்ள நூற்​றுக்​கணக்​கானோருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​களை சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் உன்​னிப்​பாகக் கண்​காணித்து வரு​கின்​றனர்.

காங்​கோவை ஒட்டி அமைந்​துள்ள உகாண்​டா, தெற்கு சூடான் போன்ற நாடு​கள் இதனுடன் நெருங்​கிய போக்​கு​வரத்​துத் தொடர்​பைக் கொண்​டிருப்​ப​தால், இந்த நோய் எல்லை தாண்டி பரவக் கூடும் என்ற அச்​ச​மும் அதி​கரித்​துள்​ளது.

எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்​களில் ஒன்​றாகும். இது உடலின் உட்​புற உறுப்​புகளில் கடுமை​யான ரத்​தப்​போக்​கு, உறுப்பு செயலிழப்பு மற்​றும் மரணத்தை ஏற்​படுத்​தக் கூடும்.

SCROLL FOR NEXT