புதுடெல்லி: இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: "இலங்கைக்கு கடந்தாண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 23 லட்சம் பேர் வந்தனர். இவர்களில் 5,31,511 பேர் இந்தியர்கள். இது அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையை விட 1,14,000 அதிகம். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்து வருகிறது.
2-வது இடத்தில் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் உள்ளனர். கடந்தாண்டில் 21,277 பேர் வந்துள்ளனர். இந்தாண்டின் முதல் 15 நாளில் 1,31,898 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.