தொழில்நுட்பம்

பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் பாதை மாறினாலும் விண்ணில் உயிர் பிழைத்த ஸ்பெ​யினின் குட்டி செயற்கைக்கோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் அனுப்​பிய பிஎஸ்​எல்வி சி-62 ராக்​கெட் பாதை மாறியதால் 16 செயற்​கைக்கோள்களின் நிலை குறித்து தெரி​யாத போது ஒரே ஒரு குட்டி செயற்​கைக்​கோள் மட்​டும் விண்​ணில் உயிர்ப் பிழைத்து தகவல்​களை அனுப்பி உள்​ளது. இது அனை​வரை​யும் ஆச்​சரியப்​படுத்தி உள்​ளது.

இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ), கடந்த திங்​கட்​கிழமை 12-ம் தேதி பிஎஸ்​எல்வி சி-62 என்ற ராக்​கெட்டை விண்​ணில் ஏவியது. இது 44.4 மீட்​டர் உயரத்​துடன் 4 நிலைகளை கொண்​டது. இது 2026-ம் ஆண்​டின் முதல் ஏவுதலாக இருந்​தது.

இந்த ராக்​கெட் மத்​திய பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் (டிஆர்​டிஓ) இஓஎஸ் - என்1 என்ற அதிநவீன செயற்​கைக்​கோள் மற்​றும் மொரீசி​யஸ், நேபாளம், ஸ்பெ​யின் போன்ற வெளி​நாடு​களின் செயற்​கைக் கோள்​கள் என மொத்​தம் 16 செயற்​கைக் கோள்​களை சுமந்து கொண்டு விண்​ணில் பாய்ந்​தது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ் தவான் விண்​வெளி ஏவு தளத்​தில் இருந்து காலை 10.17 மணிக்கு இந்த ராக்​கெட் ஏவப்​பட்​டது. ஆனால், பிஎஸ்​எல்வி சி - 62 ராக்​கெட் விண்​ணில் செல்​லும் போது 3-வது கட்​டத்​தில் பாதை வில​கியது. இது இஸ்ரோ விஞ்​ஞானிகள் மற்​றும் அனை​வரையும் அதிர்ச்சிக்கு உள்​ளாக்​கியது. இதுதொடர்​பான தரவு​களை ஆய்வு செய்து வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார்.

ஆனால், ராக்​கெட்​டில் அனுப்​பிய 16 செயற்​கைக்​கோள்​களின் நிலை குறித்து தகவல்​கள் வெளி​யாக​வில்​லை. இதனால் அவை அனைத்​தை​யும் விண்​வெளி​யில் சுற்​று​வட்​டப் பாதை​யில் நிலைநிறுத்த முடி​யாமல் போன​தாக கருதப்​பட்​டது. இந்​நிலை​யில், ஸ்பெ​யினைச் சேர்ந்த 25 கிலோ எடை கொண்ட ஒரு குட்டி செயற்​கைக்​கோள் மட்​டும் யாரும் எதிர்​பா​ராத வண்​ணம் திடீரென தகவல்​களை அனுப்பி உள்​ளது. இத்​தகவலை அந்த செயற்​கைக்​கோளை அனுப்​பிய ஸ்டார்ட் அப் நிறு​வன​மான ஆர்​பிட்​டல் பாராடிம் (Orbital Paradigm) என்ற நிறு​வனம் உறுதி செய்​துள்​ளது.

இந்த நிறு​வனம் ‘கெஸ்ட்​ரல் இனிஷியல் டெமான்​ஸ்ட்​ரேட்​டர்’ அல்​லது கிட் (KID) என்ற செயற்​கைக்​கோளை பிஎஸ்​எல்​வி-சி62 ராக்​கெட் மூலம் அனுப்​பியது. அதில் சென்ற அனைத்​தும் செயலிழந்த நிலை​யில், கிட் மட்​டும் விண்​ணில் கடுமை​யான சூழ்​நிலைகளை தாங்​கி, பூமிக்கு முக்​கிய தகவல்​களை அனுப்​பி​யுள்​ளது என்று அந்​நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

ராக்​கெட் 3-வது நிலை​யில் பாதை வில​கி​னாலும், 4-வது நிலை​யில் கிட் மட்​டும் தனி​யாகப் பிரிந்து இயங்க தொடங்கி உள்​ளது என்று ஆர்​பிட்​டல் பாராடிம் நிறு​வனம் கூறி​யுள்​ளது. இதற்​கிடை​யில் தென் பசிபிக் பெருங்​கடலில் பாது​காப்​பாக விழும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டிருந்த இந்த கிட் செயற்​கைக்​கோள், விண்​ணில் கடுமை​யான அழுத்​தங்​கள் வெப்​பத்​தை தாங்​கி செயல்​பட்​டது விஞ்​ஞானிகளை ஆச்​சரி​யத்​தில்​ ஆழ்த்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT