தொழில்நுட்பம்

“உலகுக்கு இந்தியா தலைமை வகிக்கும்” - டெல்லி மாநாட்டில் ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் புகழாரம்

செய்திப்பிரிவு

ஓபன் ஏஐ நிறு​வன தலை​மைச் செயல் அதி​காரி சாம் ஆல்ட்மேன் டெல்லி ஏஐ உச்சி மாநாட்​டில் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் மட்டும் வாரந்​தோறும் சுமார் 10 கோடி பேர் சாட் ஜிபிடி தளத்​தைப் பயன்​படுத்​துகின்​றனர். இதில் மூன்​றில் ஒரு பங்​குக்​கும் அதி​க​மானோர் மாணவர்​கள் என்​பது​தான் தனிச் சிறப்பு.

ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் கோடிங் தளமான ‘கோடெக்​ஸ்’ பயன்​பாட்​டில் உலகிலேயே மிக வேக​மாக வளர்ந்து வரும் சந்​தை​யாக இந்​தியா திகழ்​கிறது. கடந்த ஓராண்டில் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் அசுர வளர்ச்சியை எட்​டி​யுள்​ளது.

          

பள்ளி அளவிலான கணிதப் பாடங்​களுக்கே திணறிய ஏஐ தொழில்​நுட்​பம், இன்று ஆராய்ச்சி அளவி​லான கணிதத் தீர்​வு​களை வழங்​கு​வதுடன், இயற்​பியல் துறை​யில் புதிய கண்​டு​பிடிப்​பு​களை உரு​வாக்​கும் அளவுக்கு உயர்ந்துள்ளது வியப்​பளிக்​கிறது.

உலகின் மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தி​யா, ஏஐ தொழில்​நுட்​பத்தை வெறும் பயன்​பாட்​டுடன் நிறுத்​திக் கொள்​ளாமல், அதன் எதிர்​காலத்தை தீர்​மானிக்​கும் சக்தியாக​வும், தலைமை தாங்​கும் இடத்​தி​லும் உள்​ளது. இன்​னும் சில ஆண்​டு​களில் உண்​மை​யான ‘சூப்​பர் இன்​டெலிஜென்​ஸ்’ எனும் அதீத நுண்​ணறி​வுத் தொழில்நுட்பத்தின் தொடக்க நிலையை எட்​டி​விடு​வோம்.

ஆனால், இந்​தத் தொழில்​நுட்​பம் ஒரு குறிப்​பிட்ட நிறு​வனம் அல்​லது நாட்​டின் கைகளில் முடங்​கி​விடக் கூடாது. இது ஜனநாயகப்​படுத்​தப்பட வேண்​டும். அப்​போது​தான் சுதந்​திரம், சமத்​து​வம், மனித குல வளர்ச்சி உறுதி செய்யப்படும். ஏஐ தொழில்​நுட்​பம் காரண​மாக மருத்​து​வம், கல்வி போன்ற சேவை​களின் செலவு குறை​யும்.

அதே வேளை​யில், தற்​போதைய சில வேலைவாய்ப்புகளில் மாற்​றங்​கள் ஏற்​படலாம். தொழில்நுட்ப வளர்ச்சி என்​பது எப்​போதும் பழைய வேலைகளை மாற்​றியமைக்​கும். அதே​நேரம், மனிதர்​கள் எப்​போதும் புதிய மற்​றும் சிறந்த வேலைகளைக் கண்​டறி​வார்​கள் என்​ப​தில் ஐயமில்​லை. இவ்​வாறு சாம்​ ஆல்ட்​மேன்​ பேசி​னார்.

SCROLL FOR NEXT