தமிழகம்

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பழனிசாமி, நயினார் நாகேந்திரன் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் பள்​ளிக்​கூடம் முதல் பள்​ளி​வாசல் வரை பெண்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகி உள்​ளதாத அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளனர்.

இதுகுறித்து பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: விழுப்​புரம் அருகே திமுக ஒன்​றியச் செய​லா​ளர், பெண் ஒரு​வரை 6 மாத​மாக மிரட்டி தொடர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கிய​தாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்​கிறது. திமுக ஆட்​சி​யில், திமுக​வினரிடம் இருந்தே பெண்​களைகாக்க வேண்​டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்​துள்​ளார் முதல்​வர் ஸ்டா​லின்.

அமைச்சருக்கு நெருக்​க​மான அனு​தாபிமுதல் ஒன்​றியச் செயலா​ளர்வரை இந்த திமுக பாலியல் சார்​களைக் கூட கட்​டுப்​படுத்த முடி​யாத தலை​வ​ராக தான் இந்தமுதல்​வர் இருக்​கிறார். தன் கட்சிகாமுகர்​களை ஒடுக்க முடி​யாதஇந்த முதல்​வர், தமிழகத்தை எப்​படி பாது​காக்​கப் போகிறார். திமுக ஒன்​றியச் செய​லா​ளர் மீது கடுமை​யான சட்ட நடவடிக்​கை எடுக்​கப்​பட வேண்​டும்​. இவ்​​வாறு​ பதி​விட்​டுள்​ளார்​.

நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்​டம் நரிக்​குடி ஒன்​றி​யத்​தில் உள்ள தர்​கா​வில் அஸ்​ரத் ஆக நியமிக்​கப்​பட்​டுள்ள அப்​துல் அஜீஸ் என்​பவர் தர்கா​வுக்கு வந்த பெண்​ணைப் பாலியல் வன்​கொடுமைசெய்ய முயன்​று, கத்​தி​யால் குத்​தி​ய​தாக வெளிவந்​த தகவல்கடும் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

பள்ளி முதல் பள்​ளி​வாசல் வரை பாலியல் கரங்​கள் பெண்​களைத் தொடர்​கிறது என்​றால் திமுக அரசை​யும், அதன் கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் சட்​டம் ஒழுங்​கை​யும் குற்​ற​வாளி​கள் ஒரு பொருட்​டாகவே மதிக்​க​வில்லை என்​று​தானே அர்த்​தம்.

அப்​துல் அஜீஸ் மீது பாலியல் குற்​றச்​சாட்​டு​கள் உள்​ளநிலை​யில், அவர் தர்​கா​ தலை​வ​ராக எப்​படி நியமிக்​கப்​பட்​டார்.குற்​ற​வாளிக்கு கடும் தண்​டனை கிடைப்​பதை உறு​தி​செய்​வதோடு, பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி​யைப் பெற்​றுத்தர வேண்​டும்.

SCROLL FOR NEXT