தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்தை சட்டப் போராட்டம் மூலம் தடுப்போம்: போராட்டக் குழு திட்டவட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்​தூர் புதிய விமான நிலை​யத் திட்​டத்தை சட்​டப் போராட்​டம் மூலம் தடுப்​போம் என்று எதிர்ப்பு போராட்​டக் குழு திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக பரந்​தூர் புதிய விமான நிலை​யத் திட்ட எதிர்ப்பு போராட்​டக் குழு​வின் தலை​வர் ஜி. சுப்​பிரமணி​யன், செய​லா​ளர் எஸ்​.டி. கதிரேசன் ஆகியோர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறப்பட்டுள்ளதாவது: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை எதிர்த்து சாதி, மதம் கடந்து நாம் அனை​வரும் காட்டி வரும் ஒற்​றுமையே நமது மிகப்​பெரிய பலம். இந்த ஒற்​றுமை​யால்​தான் ஏகனாபுரம் கிராமத்​துக்​குள் தமிழக அரசால் இது​வரை ஓர் அடி கூட முன்​னேற முடிய​வில்​லை. இது நமது போராட்​டத்​துக்கு கிடைத்த மாபெரும் வெற்​றி.

ஆளும் கட்​சி​யைத் தவிர அனைத்து அரசி​யல் கட்​சிகளும் நமது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிப்​பது நமக்கு கூடு​தல் வலிமை சேர்க்​கிறது. மக்​களின் சம்​மதம் இன்றி இத்​திட்​டத்தை செயல்​படுத்த முடி​யாது என்​பதை அரசு நன்கு உணர்ந்​துள்​ளது. அதே வேளை​யில், பாதிக்​கப்​படும் மக்​களை மன உளைச்​சலுக்கு உள்​ளாக்க அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்கு பொது​மக்​கள் அஞ்​சத் தேவை​யில்​லை. நமது மண்​ணைக் காக்க சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் எதிர்ப்பு போராட்​டக் குழு சார்​பில் பொதுநல வழக்​குத் தொடரப்​பட்​டுள்​ளது.

இதில் தமிழகத்​தின் மூத்த வழக்​கறிஞர் நம் தரப்​புக்​காக வாதாடு​கிறார். இந்த வழக்கு உயர் நீதி​மன்​றம் முதல் உச்ச நீதி​மன்​றம் வரை பல்​வேறு நிலைகளைக் கடக்க வேண்​டி​யுள்​ளது. எனவே, அரசு நினைத்​ததை இங்கே எளி​தில் நடை​முறைப்​படுத்த முடி​யாது. சட்​டப் போராட்​டத்​தில் நாம் நிச்​ச​யம் வெற்றி பெற்று நமது விவ​சாய நிலங்​களை​யும், கிராமத்​தை​யும் காப்​போம். வழக்​கின் அடுத்​தடுத்த நகர்​வு​கள் குறித்து கிராமக் கூட்​டங்​கள் மூலம் பொது​மக்​களுக்​குத் தொடர்ந்து தெரிவிக்​கப்​படும்​. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT