தமிழகம்

“சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் காப்போம்” - கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘சமூக நல்​லிணக்​கத்​தைப் பாது​காக்க நாங்​கள் உறு​தி​யாக இருப்​போம்’ என்று கிறிஸ்​து​மஸ் விழா​வில் தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​தார்.

தவெக சார்​பில் சமத்​துவ கிறிஸ்​து​மஸ் விழா மாமல்​லபுரத்​தில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் நேற்று நடை​பெற்​றது. தவெக தலை​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்ற இவ்​விழாவில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆற்​காடு நவாப், பிரம்ம குமாரி​கள் ஆகியோ​ர் பங்​கேற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் குழந்​தைகள் பலர் விஜய்க்கு பூ கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தனர். அந்த குழந்​தைகளு​டன் சேர்ந்து விஜய் கேக் வெட்டி அவர்​களுக்கு ஊட்டினார், குழந்​தைகளும் விஜய்க்கு கேக் ஊட்டினர். அவர்​களுக்கு பரிசுகளை​யும் விஜய் வழங்​கி​னார்.

விழா​வில் விஜய் பேசி​ய​து: அன்​பும் கருணை​யும்​தான் அனைத்​துக்​கும் அடிப்​படை. இவை இரண்​டும் இருப்​பது​தான் தாய் மனது. நம் தமிழக மண்​ணும் அப்​படிப்​பட்ட தாய் அன்பு கொண்ட மண். தாய்க்கு அனைத்து பிள்​ளை​களும் ஒன்​று​தான். பொங்​கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்​து​மஸ் என அனைத்து பண்​டிகைகளை​யும் பகிர்ந்வது​தான் நம் ஊர்.

வாழ்க்கை முறை​யும், வழி​பாட்டு முறை​யும் வேறு​வேறு என்​றாலும் நாம் அனை​வரும் சகோ​தரர்​கள்​தான். நான் அரசி​யலுக்கு வந்​தவுடன் கடவுள் நம்​பிக்கை உள்​ளது என அறி​வித்​ததற்கு காரணம், உண்​மை​யான நம்​பிக்​கை​தான் நல்​லிணக்​கத்தை விதைக்​கும். மற்​றவர்​களின் நம்​பிக்​கையை மதிக்க சொல்​லித்​தரும். அப்​படிப்​பட்ட நம்​பிக்கை இருந்​தால் அனைத்து பிரச்​சினை​களை​யும் வெல்லலாம்.

நம்​பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் உள்​ளன. அவற்​றில் ஒன்று - ஒரு இளைஞரை அவரது சகோ​தரர்​கள் கிணற்​றில் தள்​ளி​விடு​கிறார்​கள் அதிலிருந்து மீண்ட இளைஞர் நாட்டுக்கே அரச​னாகி, துரோகம் செய்த சகோ​தரர் மட்டுமின்றி அந்த நாட்டையே எப்​படி காப்​பாற்​றி​னார் என்​ப​தைக் கூறுகிறது.

இந்த கதை யாரை குறிக்​கிறது என்​பதை நான் சொல்​லத் தேவையில்​லை. கடவுளின் அருள், மக்​களை மானசீக​மாக நேசிக்​கும் அன்​பு, அதீத வலிமை, அதற்கான உழைப்​பும் இருந்​தால் எதிரிகளை வீழ்த்​தலாம் என்​பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

ஒரு உறு​தியை கொடுக்க விரும்​பு​கிறேன். நானும் தவெக​வினரும் சமூக நல்​லிணக்​கத்​தைப் பாது​காக்க 100 சதவீதம் உறு​தி​யாக இருப்​போம். அதற்​காகத்​தான் நமது கொள்​கைக்கு மதச்​சார்​பற்ற கொள்கை எனப் பெயர் வைக்​கப்​பட்​டது. கண்​டிப்​பாக ஒளி ஒன்று பிறக்​கும். அது நம்மை வழிநடத்​தும் உறு​தியாக இருங்​கள், வெற்றி நிச்​ச​யம். இவ்​வாறு பேசி​னார்.

அரசை பாராட்​டிய நவாப்: இந்​நிகழ்ச்​சி​யில் ஆற்​காடு நவாப் முகமது ஆசிப் அலி திவான் பேசும்​போது, “நமது மாநிலம் ஒற்​றுமைக்குச் சிறந்த உதா​ரண​மாக​வும், மனித நே​யத்தை மதிக்​கும் மாநில​மாக​வும், அனைத்து மதத்​தினரை​யும் சமமாக மதிக்​கும் மாநில​மாக​வும் உள்​ளது. மேலும், பெண்கள் குழந்​தைகளுக்கு பாது​காப்​பான மாநில​மாகவும் திகழ்கிறது. இந்​தி​யா​வில் பொருளா​தார வளர்ச்​சி​யில் 2-வது இடத்​தில் உள்​ளது” என பாராட்டி பேசினார்.

தமிழக அரசை விஜய் கடுமையாக விமர்​சிக்கும் நிலை​யில், இந்நிகழ்​ச்​சி​யில் தமிழக அரசைப் பாராட்டி ஆற்​​காடு நவாப் பேசி​யது பரபரப்பை ஏற்​படுத்​தியது.

SCROLL FOR NEXT