விஜய்
திருச்சி: தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் பெரம்பூர் தொகுதியை ராஜினாமா செய்து விட்டு, அங்கு தொகுதியை தனக்காக விட்டுக் கொடுத்த மாவட்டச் செயலாளர் சிவாவை நிறுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே, அவர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவுகிறது. இந்த தொகுதியில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிற்கும்படி தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சகாயத்தை நிறுத்தி வெற்றி பெற வைத்து, தமிழகத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதற்கன தனி துறையை உருவாக்கி அமைச்சராக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன்மூலம் தென் மாவட்ட மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், லால்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவரை நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.