விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு: விசிக-வின் திட்டம் என்ன?

செய்திப்பிரிவு

தி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள விசிக, இந்​தத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. யாரும் எதிர்​பா​ராத திருப்​ப​மாக கட்​டுமன்​னார்​கோ​வில் தொகு​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​வர் திரு​மாவளவனும் போட்​டி​யிடு​கி​றார். அதேசம​யம், சிட்​டிங் எம்​எல்​ஏ-க்​களான ஆளூர் ஷாந​வாஸ், எஸ்​.எஸ்​.​பாலாஜி, பனையூர் பாபு ஆகி​யோ​ருக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

தற்​போது எம்​பி-​யாக இருக்​கும் திரு​மாவளவன் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிடு​வதும் சிட்​டிங் எம்​எல்​ஏ-க்​களில் மூன்று பேருக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​காததும் விசிக-​வினர் இடையே இப்​போது பேசுபொருளாகி இருக்​கிறது. வாய்ப்பு மறுக்​கப்​பட்ட சிட்​டிங் எம்​எல்​ஏ-க்​கள் மூவ​ரும் திமுக சைடில் அதி​கம் சாய்ந்து விட்​ட​தாலேயே அவர்​களுக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டுள்​ள​தாகச் சொல்​கி​றார்​கள்.

“களத்​தில் நான்கு முனை போட்டி இருப்​ப​தால் தேர்​தல் முடிவு​கள் எப்​படி வேண்​டு​மா​னாலும் இருக்​கலாம். அப்​படி ஒரு​வேளை அமைந்து திமுக கூட்​டணி ஆட்சி அமைய வேண்​டிய சூழல் ஏற்​பட்​டால் அமைச்​சர​வை​யில் தனக்​கான இடத்தை ரிசர்வ் செய்​வதற்​காகவே திருமா சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​கி​றார்” என்​றும் சிலர் சொல்​கி​றார்​கள்.

          

இது குறித்து விசிக நிர்​வாகி​களிடம் விசா​ரித்த போது, “கட்சி தொடங்​கியது முதல் 25 ஆண்​டு​களாக பலர் அர்ப்​பணிப்​புடன் பணி​யாற்றி வரு​கின்​ற​னர். அவர்​களில் பலர் வாய்ப்பு ஏது​வும் கிடைக்​காமல் உள்​ளனர். அதி​முக-​வும் திமுக-​வும் தேர்​தலில் வெற்றி பெறு​வதற்​காக மீண்​டும் மீண்​டும் குறிப்​பிட்ட நபர்​களுக்கே சீட் வழங்​கு​கி​றார்​கள். ஆனால் விசிக, அனை​வ​ருக்​கும் அதி​காரம், அதி​கார பரவலாக்​கம் உள்​ளிட்​ட​வற்றை வலி​யுறுத்​தும் கட்​சி. அதனால் ஒரே நபருக்கு மீண்​டும், மீண்​டும் சீட் வழங்​கு​வது சரி​யான​தாக இருக்​காது.

இதன் காரண​மாகவே, மூவ​ருக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், திரு​மாவளவனே நேரடி​யாகப் போட்​டி​யிடு​வது என்​பது மற்ற தொகு​தி​களி​லும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும். தொண்​டர்​களுக்​கும் மேலும் உற்​சாகம் அளிக்​கும். இதைத் தவிர வேறெந்த உள்​நோக்​க​மும் இல்​லை” என்​றனர்​.

SCROLL FOR NEXT