பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப் படம் 
தமிழகம்

பொங்கலுக்குப் பிறகு விருப்ப மனு: பிரேமலதா அறிவிப்பு

செய்திப்பிரிவு

பொங்​கலுக்​குப் பிறகு தேமு​தி​க-​வில் விருப்​பமனு பெறப்​படும் என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​துள்​ளார்.

தேமு​திக மக்​கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடை​பெறவுள்ள நிலை​யில், மாநாட்டு பணி​கள் குறித்து நேற்று கோயம்​பேட்​டில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் கடலூர் மாவட்ட நிர்​வாகி​களு​டன் பிரேமலதா விஜய​காந்த் ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்த அவர் கூறிய​தாவது: தேமு​தி​க-​வின் மாநாடு, விஜய​காந்த் குருபூஜை, அதன் பின்​னர் பொங்​கல் என அனைத்​தும் முடிந்த பின்​னர் நான்​காம் கட்ட சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்க இருக்​கின்​றோம். அதற்கு முன்​ன​தாக, யாருடன் கூட்​ட​ணி, எத்​தனை தொகு​தி​கள், எந்​தெந்​தத் தொகு​தி​கள் என்​பது குறித்து முடிவு செய்​து​விட்டு பொங்​கலுக்​குப் பிறகு விருப்​பமனு வாங்க இருக்​கி​றோம்.

பாமக சார்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தாத தமிழக அரசைக் கண்​டித்து புதன்​கிழமை நடக்​கக்​கூடிய ஆர்ப்​பாட்​டத்​துக்கு தேமு​தி​க-வுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. நாங்​களும் கடிதம் மூலம் போராட்​டம் வெற்றி பெற ஆதரவு தெரி​வித்து இருக்​கி​றோம்.

எந்​தவொரு கட்​சி​யுமே 234 தொகு​தி​களை​யும் தான் இலக்​காக கொள்​ளும். விஜய​காந்த் கட்சி ஆரம்​பித்த போதும் யாருட​னும் கூட்​டணி வைக்​க​வில்​லை. அதே​போல், எங்​கள் இலக்​கும் 234 தொகு​தி​களும் தான்.

யாருடன் கூட்​ட​ணி, யாரெல்​லாம் வேட்​பாளர், எத்​தனை சீட், எந்​தெந்​தத் தொகுதி என்​பது குறித்​தெல்​லாம் தலை​மைக் கழகம் அறிவிக்​கும். ஜனவரிக்​குள் சுற்​றுப்​பயணம் மற்​றும் விருப்ப மனு பெறு​தலை முடித்​து, பிப்​ர​வரி மற்​றும் மார்ச்​சில் தேர்​தல் பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்க உள்​ளோம்.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT