“எஸ்ஐஆரில் 65 லட்சம் பேரை புதிதாக சேர்க்க முயற்சி” - வைகோ கண்டுபிடிப்பு

முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த வைகோ.

முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த வைகோ.

Updated on
1 min read

“எஸ்​ஐஆர் என்​பது ஜனநாயக மோசடி. 85 லட்​சம் பேரை நீக்​கி​விட்டு 65 லட்​சம் பேரை புதி​தாக இணைக்​கும் மோசடி வேலை நடக்​கிறது” என்று மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ போதைப்​பொருள் ஒழிப்​பு, சாதி மோதல் தடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யுறுத்தி ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சமத்​துவ நடைபயணம் மேற்​கொள்​கி​றார். இந்​நிலை​யில் அவர் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து நடைபயணத்தை தொடங்கி வைப்​ப​தற்​கான அழைப்​பிதழை வழங்​கி​னார்.

பின்​னர் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: போதைப் பொருட்​கள், கஞ்சா குறித்து மக்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்​த​வும், எச்​சரிக்கை செய்​யும் விதத்​தி​லும், தமி​ழ​கத்​தில் சாதி, மத மோதல்​களுக்கு இடமில்லை என்​பதை வலி​யுறுத்​தி​யும் சமத்​துவ நடைபயணத்தை வரும் ஜன.2-ம் தேதி மேற்​கொள்ள உள்​ளேன். 950 பேர் இதில் பங்​கேற்​கின்​ற​னர். பெரும்​பாலான கல்​லூரி மாண​வர்​கள் இதில் பங்​கேற்​கி​றார்​கள்.

நடைபயணத்தை திருச்சி உழவர் சந்​தை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்​கி​றார். தொடக்க நிகழ்​வில் கே.எம். காதர் மொகிதீன், செல்​வப்​பெருந்​தகை, திரு​மாவளவன், கமல்​ஹாசன் ஆகி​யோர் பங்​கேற்​கி​றார்​கள். அதன் பின்​னர் விராலிமலை, மேலூரில் நடை​பெறும் மாநாட்​டில் தோழமைக் கட்​சி​யினர் பங்​கேற்​க​வுள்​ளனர். ஜன.12-ம் தேதி மதுரை​யில் நடை​பெறும் நிறைவு நிகழ்ச்​சி​யில் கவிஞர் வைர​முத்​து, நடிகர் சத்​ய​ராஜ் வாழ்த்து தெரிவிக்​கின்​ற​னர். கட்​டுப்​பா​டாக​வும், போக்​கு​வரத்து ஒழுங்​குட​னும் இந்த நடைபயணம் மேற்​கொள்​ளப்​படும்.

2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற கூட்​டணி தான் மகத்​தான வெற்றி பெறும். திமுக தனி பெரும்​பான்​மை​யுடன் ஆட்​சி​யில் அமரும். யார் யாரோடு கூட்​டணி அமைத்​தா​லும், யார் எந்த முயற்சி செய்​தா​லும் மக்​கள் மன்​றத்​தில் திமுக கூட்​ட​ணிக்​குத்​தான் ஆதரவு உள்​ளது. புதி​தாக அரசி​யல் பிர​வேசம் செய்​தவர்​கள், ஏற்​கெனவே எதிர்த்​துக் கொண்​டிருப்​பவர்​கள் திமுக-வை எதிர்​கொண்டு வெற்றி பெற முடி​யாது. திமுக கூட்​டணி வெற்​றிக்கு நாங்​கள் பாடு​படு​வோம்.

சட்​டசபை தேர்​தல் அறி​விப்பு வந்​தவுடன் தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்தை நடை​பெறும்; இப்​போது அதற்​கான தேவை​யில்​லை. எஸ்​ஐஆர் என்​பது ஜனநாயக மோசடி, 85 லட்​சம் பேரை நீக்​கி​விட்டு 65 லட்​சம் பேரை புதி​தாக இணைக்​கும் மோசடி வேலை நடக்​கிறது. என்ன முயற்சி செய்​தா​லும் அவர்​களால் தமி​ழ​கத்​தில் வெற்றி பெற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த வைகோ.</p></div>
“மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை வந்தாலும் மக்கள் தோற்கடிப்பார்கள்” - மு.வீரபாண்டியன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in