பொன்முடி,  கவுதமசிகாமணி

 
தமிழகம்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஏப்.2-ல் தீர்ப்பு: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விதிகளை மீறி செம்மண் அள்ளியதாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, அவரது மகன் கவுதமசி​காமணி மீது தொடரப்பட்ட வழக்​கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் ஏப்​.2-ம் தேதி தீர்ப்பளிக்கிறது.

விழுப்புரம் மாவட்​டம், வானூர் அடுத்த பூத்​துறை கிராமத்​தில் உள்ள செம்​மண் குவாரி​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவை மீறி 2 லட்​சத்து 64,644 லோடு செம்​மண்ணை கடத்​தி, அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்​தி​ய​தாக திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, அவரது மகன் கவுதமசி​காமணி, அவர்​களது ஆதர​வாளர்​கள் ஜெயச்​சந்​திரன், ராஜ மகேந்​திரன், சதானந்​தம், கோதகு​மார், கோபி​நாதன், லோக​நாதன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்​தனர்.

          

இவ்​வழக்​கின் மீதான விசா​ரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. குற்​றம் சாட்டப்பட்ட லோக​நாதன், உடல்நலக்​ குறை​வால் கால​மாகிவிட்​டார். அரசு தரப்​பில் 57 சாட்​சிகள் சேர்க்​கப்​பட்​டனர். இவர்​களில் 33 பேர் பிறழ் சாட்​சி​யம் அளித்​தனர்.

அரசுத் தரப்பு சாட்​சிகளின் விசா​ரணை கடந்​தாண்டு அக்​டோபர் மாதம் நிறைவு பெற்​றது. இந்​நிலை​யில் செம்​மண் குவாரி கொள்ளை வழக்​கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில், நீதிபதி மணிமொழி முன்​னிலை​யில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அரசு தரப்​பில் வழக்​கறிஞர் கார்த்​தி​கேயன் ஆஜராகி வாதிட்​டார். பொன்​முடி, கவுதமசி​காமணி, ஜெயச்​சந்​திரன், கோதகு​மார் ஆகியோர் ஆஜராக​வில்​லை. ராஜமகேந்​திரன், சதானந்​தம், கோபி​நாத் ஆஜரா​யினர். இரு தரப்​பிலும் வாதங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன.

அனைத்து நிலைகளி​லும் விசா​ரணை நிறைவு பெற்​ற​தால், செம்​மண் கொள்ளை வழக்கு மீதான தீர்ப்பு வரும் ஏப்​.2-ம் தேதி அளிக்​கப்​படும் என மாவட்ட நீதிபதி மணிமொழி தெரி​வித்​தார். மேலும் அவர், தீர்ப்பு வழங்​கப்​படும் நாளில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் ஆஜர்​படுத்த குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT