தமிழகம்

தமிழக மக்கள் 25 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு அங்கீகாரம் தரவில்லை: விஜயபிரபாகரன் வேதனை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தே​மு​தி​க​வுக்கு 25 ஆண்​டு​களாக மக்​கள் அங்​கீ​காரம் தரவில்லை என கிருஷ்ணகிரி​யில் அக்​கட்​சி​யின் இளைஞர் அணி மாநிலச் செய​லா​ளர் விஜயபிர​பாகரன் தெரி​வித்​தார்.

கிருஷ்ணகிரி​யில் நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய அவர் மேலும் கூறிய​தாவது: தவெக அரசு, தற்​போது பரந்​தூர் விமான நிலை​யம் அமைத்​தால் விளைநிலங்​கள் பாதிக்​கப்​படும் எனக் கூறி, திட்​டத்தை ரத்து செய்து வேறு இடத்​துக்கு மாற்ற உள்​ளனர். ஆனால், தற்​போது செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் புதிய விமானநிலை​யம் அமைக்க தமிழக அரசு, மத்​திய அரசுக்​குப் பரிந்​துரைக் கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

அப்​போது அங்​குள்ள விளைநிலங்​கள் பாதிக்​கப்​ப​டா​தா, ஏற்​கெனவே பரந்​தூரில் 40 சதவீதம் நிலத்தை அரசு கையகப்​படுத்​தி​யுள்ள நிலை​யில், அந்த நிலத்தை வழங்​கிய விவ​சா​யிகள் என்ன ஏமாளி​களா. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT