தமிழகம்

“இயற்கை தந்த வரங்களுக்கு நன்றி சொல்லும் விழா பொங்கல்” - குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

செய்திப்பிரிவு

கோவை: பொங்​கல் பண்​டிகை இயற்கை தந்த வரங்​களுக்கு நன்றி சொல்​லும் விழா என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறி​னார்.

திருப்​பூர், கோவை மாவட்​டங்​களில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்​வு​களில் பங்​கேற்க, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று கோவை வந்​​தார்.

விமான நிலை​யத்​தில் அவரை அமைச்​சர் முத்​து​சாமி, ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர், மாநகர காவல் ஆணை​யர் கண்​ணன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கார்த்​தி​கேயன் மற்​றும் அதி​காரி​கள் வரவேற்​றனர். பின்​னர், சி.பி.​ரா​தா கிருஷ்ணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சூரியனை வழிபடும் நாளாக பொங்கல் அமைந்​தா​லும், இயற்கை தந்த வரங்​களுக்​கெல்​லாம் நன்றி சொல்​லுகின்ற தமிழ் விழா​வாகவும் அமைந்​துள்​ளது.

உலகெங்​கும் உள்ள தமிழ் மக்​கள் அனை​வருக்​கும் பொங்​கல் நல் வாழ்த்​துகள். இவ்​வாறு அவர் கூறி​னார். தொடர்ந்​து, நேற்று இரவு திருப்​பூரில் தங்​கிய குடியரசு துணைத் தலை​வர், திருப்​பூரில் இன்று நடை​பெறும் பொங்​கல் விழா​வில் கலந்து கொள்​கிறார்.

பின்னர், கோவை சிட்ரா சாலை​யில் உள்ள கேஎம்​சிஹெச் மருத்​து​வ​மனை​யில் புதிய கட்​டிடத் திறப்பு விழா​வில் அவர் பங்​கேற்​கிறார். தொடர்ந்​து, கொடிசியா அரங்​கில் நடை​பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்​து​வ​மனை​யின் 50-வது ஆண்டு பொன்​விழா நிகழ்​வில் பங்​கேற்​கிறார்.பின்​னர், இன்று இரவு 7 மணிக்கு கோவை விமான நிலை​யத்​தில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார்.

SCROLL FOR NEXT