லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்

லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்
Updated on
1 min read

திண்டுக்கல்: சபரிமலை​யில் ஐயப்​பனுக்கு திரு​வாபரணங்​கள் அணிவிக்​கப்​பட்டு மகர விளக்கு வழி​பாடு கோலாகல​மாக நடை​பெற்​றது. பொன்​னம்​பலமேட்​டில் திரண்​டிருந்த திரளான பக்​தர்​கள் மகரஜோ​தியை வழிபட்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லின் முக்​கிய நிகழ்ச்​சி​யாக மகரஜோதி தரிசனம் திகழ்​கிறது. மகரஜோ​தியை தரிசிக்க தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, கர்​நாடகா உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், மாலை அணிந்​து, விரதமிருந்து வந்த ஐயப்ப பக்​தர்​கள், பொன்​னம்​பலமேட்​டில் மகரஜோ​தி​யைக் காண நேற்று காலை முதலே திரண்​டிருந்​தனர்.

முன்​ன​தாக, மகரஜோ​தியை முன்​னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்க பாரம்​பரிய ஆபரணங்​கள் பந்​தளத்​தில் இருந்து புறப்​பட்டு நேற்று மாலை சந்​நி​தானத்தை வந்​தடைந்​தது. திரு ஆபரணப்​பெட்டி ஊர்​வல​மாகக் கொண்டு செல்​லப்​பட்​ட​தால் காலை 10 மணி முதல் பக்​தர்​கள் நிலக்​கல்​லில் இருந்து பம்​பைக்​குச் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. அதே​போல, காலை 11 மணி முதல் பக்​தர்​கள் பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. ஊர்​வலம் சென்ற பிறகே பக்​தர்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

சந்​நி​தானம் வந்த திரு ஆபரணங்​களை தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு, மேல்​சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி உள்​ளிட்​டோர் வரவேற்​றனர். தொடர்ந்​து, 18-ம் படி வழியே திரு ஆபரணப்​பெட்டி கொண்டு செல்​லப்​பட்டு நேற்று மாலை ஐயப்​பனுக்கு ஆபரணங்​கள் அணிவிக்​கப்​பட்​டன. மகரஜோதி வழி​பாட்​டுக்கு முன்​னோடி​யாக நேற்று மாலை மகர சங்​கிரம பூஜை நடை​பெற்​றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபா​ராதனை உள்​ளிட்டவை நடை​பெற்​றன. பக்​தர்​கள் சரணகோஷம் முழங்க ஐயப்​பனை வழிபட்​டனர்.

தொடர்ந்​து, பொன்​னம்​பலமேட்​டில் ஜோதி தெரிந்​ததும், சபரிமலை​யில் திரண்​டிருந்த ஐயப்ப பக்​தர்​கள் சரணகோஷங்​கள் முழங்க தரிசித்​தனர். பொன்​னம்​பலமேட்​டில் தெரிந்த மகரஜோ​தியை தரிசனம் செய்ய பக்​தர்​களுக்கு 14 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. மேலும், வண்​டிப்பெரி​யாறு, புல்​மேடு, பஞ்​சாலிமேடு, சத்​திரம், பருந்​துப்​பாறை, அய்​யன்​மலை, நீலிமலை உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்​தும் பக்​தர்​கள் மகரஜோ​தியை தரிசனம் செய்​தனர்.

மகரஜோ​தியை தரிசனம் செய்ய லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​ட​தால் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. மகரஜோ​தியை தரிசித்த பக்​தர்​கள், புல்​மேட்​டில் இருந்து சத்​திரம், வல்​லக்​கடவு வழி​யாக சந்​நி​தானம் சென்​றனர். இரவு 11 மணி வரை பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மகர​விளக்கு பூஜைக்​காக கடந்த நவ. 30-ம் தேதி நடை திறக்​கப்​பட்டு தொடர்ந்து வழி​பாடு​கள் நடத்​தப்​பட்​டன. மண்​டல, மகர​விளக்கு விழாக்​களில் இது​வரை 52 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க சபரிமலையில் மகரஜோதி தரிசனம் கோலாகலம்
வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொடுவது ஏன்? - காரணங்களும் எதிர்காலமும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in