தமிழகம்

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: நெய்​வேலி, குறிஞ்​சிப்​பாடி ஆகிய தொகு​தி​களில் கட்​சி​யினர், பொது​மக்​கள் மீது வன்​முறை வெறி​யாட்​டத்​தில் ஈடு​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தமிழக வாழ்​வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் அவசர மாநில செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. பின்​னர், நிருபர்​களிடம் கட்​சி​யின் நிறு​வனத் தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நடந்து முடிந்த தேர்​தலில், தவாக சார்​பில் நெய்​வேலி தொகு​தி​யில் திரு​மால்​வளவன், குறிஞ்​சிப்​பாடி தொகு​தி​யில் கண்​ணன் ஆகியோரை வேட்​பாளர்​களாக நிறுத்​தி​யிருந்​தேன்.

2 தொகு​தி​களி​லும் வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக உள்ள சூழ்​நிலை​யில், திமுக தனது உளவுத்துறை மூல​மாக தெரிந்​து​கொண்​டு, இத்தொகு​தி​களில் பல இடங்​களில் வன்​முறை வெறி​யாட்​டங்​களை நடத்​தி​யுள்​ளது. இதனால் வேட்​பாளர்​களும், தொண்​டர்​களும், பொது​மக்​களும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இரவு 8 மணிக்கு மேல் பூத்​களை கைப்​பற்​றி, வாக்​களித்​துள்​ளனர். ஆனால், இது​வரை ஓர் இடத்​தில் கூட குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட​வில்​லை. அதற்கு நேர்​மாறாக, எங்​கள் கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் மீது வழக்​குப் பதிந்​துள்​ளனர்.

எனவே, நீதி கிடைக்​க​வும், குற்​ற​வாளி​களைத் தண்​டிக்​க​வும், அப்​பாவி​கள் மீது போடப்​பட்ட வழக்​கு​களை ரத்து செய்​ய​வும் வேண்​டும்.

இந்​திய தேர்​தல் ஆணை​யம், தமிழக தேர்​தல் ஆணை​யம், தமிழக காவல் துறை டிஜிபி, உள்​துறை செயலர், உளவுத் துறை டிஜிபி ஆகியோர் எனக்கு நீதி வழங்க வேண்​டும். எங்​கள் கட்சி தொண்​டர்​கள், ஆதர​வளித்​தவர்​களுக்கு ஏற்​பட்ட அநீ​திக்கு எதி​ராக நீதி கேட்​கும் நடவடிக்​கை​யில் விரை​வில் ஈடு​படு​வேன். இவ்வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT