சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு: 3 மணி நேரம் காத்திருக்கும் ஓட்டுநர்கள்

சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு: 3 மணி நேரம் காத்திருக்கும் ஓட்டுநர்கள்
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு கிடைப்​ப​தில் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், ஓட்​டுநர்​கள் 3 மணி நேரம் வரை வரிசை​யில் காத்​திருந்​து, நிரப்பி செல்​லும் அவல நிலை ஏற்​பட்​டுள்​ளது.

மத்​திய கிழக்​கில் நில​வும் போர் பதற்​றத்​தால், காஸ் சிலிண்​டர், ஆட்டோ எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதை சமாளிக்க மாற்று வழிகளை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது. இதற்​கிடை​யில், வாக​னங்​ளுக்​கான எல்​பிஜி, சிஎன்ஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​கள் கடும் சிரமத்தை சந்​திக்​கின்​றனர்.

சென்னை நகரில் பல்​லா​யிரக்​கணக்​கான ஆட்​டோக்​கள், கால் டாக்​சிகள் எல்​பிஜி மற்​றும் சிஎன்ஜி எரி​வா​யுவை பயன்​படுத்​துகின்​றன. தற்​போது எல்​பிஜி எரி​வாயு தட்​டுப்​பாட்​டால், பல்​வேறு தனி​யார் ஆட்டோ எரி​வாயு நிலை​யங்​களில் மூடப்​பட்​டுள்​ளன.

சைதாப்​பேட்​டை, கிண்​டி. சிஐடி நகர் உள்பட சில இடங்​களில் திறக்​கப்​பட்​டுள்ள எரி​வாயு நிரப்​பும் நிலை​யங்​களில் நீண்ட வரிசை​யில் பல மணி நேரம் காத்​திருந்து நிரப்பி செல்​லும் அவல நிலை ஏற்​பட்​டுள்​ளது.

உதா​ரண​மாக, சிஐடி நகரில் 2 கி.மீ. தூரத்​துக்கு 3 மணி நேர​மாக நீண்ட வரிசை​யில் காத்​திருந்​து, காஸை நிரப்பி செல்​லும் பரி​தாப நிலைக்கு ஆட்டோ ஓட்​டுநர்​கள் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் ஆட்​டோ, கார் ஆகிய​வற்​றுக்கு நிரப்​பப்​படும் காஸ் நிரப்​பும் நிலை​யங்​கள் மூடப்​பட்​டுள்​ள​தால், ஆட்டோ ஓட்​டுநர்​கள் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இது குறித்​து, ஆட்டோ ஓட்​டுநர்​கள் கூறுகை​யில், “ஏற்​க​னவே ஆட்டோ எரி​வாயு தட்​டுப்​பாட்​டால், ஓட்​டுநர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது, பெரும்​பாலான நிலை​யங்​களில் எல்​பிஜி எரி​வாயு கிடைக்​காத​தால், ஓட்​டுநர்​களுக்கு மன உளைச்​சல் ஏற்​பட்​டு, உடல்​நலக் குறைவு ஏற்​படு​கிறது. இப்​பிரச்​சினைக்கு மத்​திய அரசு தீர்வு காண வேண்​டும்” என்​றனர்.

இது குறித்​து, இந்​திய எண்​ணெய் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களில் போது​மான அளவு எரி​வாயு கையிருப்பு உள்​ளது. எண்​ணெய் நிறு​வனங்​களின் கீழ் செயல்​படும் எரி​வாயு நிரப்​பும் மையங்​களுக்​கும் போது​மான அளவு காஸ் வழங்​கப்​படு​கிறது.

வாகன ஓட்​டிகள் தங்​களுக்​குரிய வாக​னங்​களில் போது​மான அளவு காஸ் நிரப்பி கொள்​ளலாம். ஆட்​டோக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​துக்​கிடப்​ப​தற்கு காரணம் பல தனி​யார் காஸ் நிரப்​பும் நிலை​யங்​களில், எரி​வாயு இல்​லாமல் இருப்​பதுதான்.

அத்​துடன், காஸ் தட்​டுப்​பாடு காரண​மாக, ஒருசில காஸ் நிரப்​பும் மையங்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளன. இதனால், ஒட்​டுமொத்​த​மாக அனை​வரும் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​கள் நடத்​தும் மையங்​களை தேடி ஒரே நேரத்​தில் செல்​வ​தால், நீண்ட வரிசை​யில் நிற்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு: 3 மணி நேரம் காத்திருக்கும் ஓட்டுநர்கள்
கஞ்சா பங்கிடுவதில் வாக்குவாதம்: புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in