தமிழகம்

வாக்காளர்களுக்கு ​திமுகவினர் டோக்கன்: அதிமுக வேட்பாளர் வளர்மதியின் கணவர் சாலையில் படுத்து தர்ணா

செய்திப்பிரிவு

சென்னை: திமுக​வினர் வாக்​காளர்​களுக்கு டோக்​கன் வழங்​கு​வ​தாக கூறி, ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் வளர்​ம​தி​யின் கணவர் சாலை​யில் படுத்து தர்ணா போராட்​டம் நடத்​தி​யது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி, ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் பா.வளர்​ம​தி​யின் கணவர், வள்​ளுவர் கோட்​டம் வாக்​குச்​சாவடிக்கு வருகை தந்​தார். சிறிது நேரத்​தில், தனது ஆதர​வாளர்​களு​டன் வள்​ளுவர் கோட்​டம் சந்​திப்​புக்​குச் சென்ற அவர், திடீரென நடுரோட்​டில் படுத்து தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். இதனால், அப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

தகவலறிந்து வந்த போலீ​ஸார் அவரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது அவர், “தி​முக வேட்​பாளர் எழிலனின் ஆதர​வாளர்​கள் வாக்​காளர்​களுக்கு ரகசி​ய​மாக டோக்​கன் வழங்கி வரு​கின்​றனர். தேர்​தலுக்​குப் பிறகு இந்த டோக்​கன்​களைக் காண்​பித்து பணம் பெற்​றுக்​கொள்​ளலாம் என ஆசை காட்​டு​கிறார்​கள். இதுகுறித்​து, புகார் அளித்​தும் அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்​காத​தால் தான் இந்த போராட்​டம்” என தெரி​வித்​தார்.

போலீ​ஸாரின் சமா​தானப் பேச்​சு​வார்த்​தையைத் தொடர்ந்து அவர் அங்​கிருந்து கலைந்து சென்​றார். இச்சம்​பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT