தமிழகம்

திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்

செய்திப்பிரிவு

திருச்சி: ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ திருச்​சி​யில் இருந்து மதுரைக்கு சமத்​துவ நடைபயணம் மேற்​கொள்​கிறார். அவரது நடைபயணத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று (ஜன.2) தொடங்​கிவைக்​கிறார்.

தமிழகத்​தின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும், உரிமை​களை மீட்​க​வும் மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ “சமத்​துவ நடைபயணம்” என்​கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்​சி​யில் இன்று (ஜன.2) தொடங்​கி, மதுரை​யில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்​கிறார்.

இந்த நடைபயணத்​தின் தொடக்க விழா நிகழ்ச்சி திருச்சி தென்​னூர் உழவர் சந்தை அரு​கில் உள்ள மாநக​ராட்​சித் திடலில் இன்று காலை 9.30 மணி​யள​வில் நடை​பெற உள்​ளது. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமத்​துவ நடைபயணத்தை தொடங்​கி​வைத்​துப் பேசுகிறார். நிகழ்ச்​சிக்​கு, அமைச்​சர் கே.என்​.நேரு தலைமை வகிக்​கிறார். அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி முன்​னிலை வகிக்​கிறார். மதி​முக முதன்​மைச் செய​லா​ள​ரும், திருச்சி மக்​கள​வைத் தொகுதி உறுப்​பினரு​மான துரை வைகோ வரவேற்​றுப் பேசுகிறார்.

விழாவில், தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசிய தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீன், மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன், திரா​விடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்​து​கொண்டு வாழ்த்​துரை வழங்​கு​கின்​றனர். நடைபயணத்​தில் மதி​முக இளைஞரணி, தொண்​டரணி, மாணவரணி​யைச் சேர்ந்த நூற்​றுக்​கணக்​கானோர் கலந்​து​கொள்​கின்​றனர்.

தென்​னூரில் இன்று காலை தொடங்​கும் நடைபயணம் மத்​தி​யப் பேருந்து நிலை​யம், கிராப்​பட்​டி, எடமலைப்​பட்டி புதூர் வழி​யாக பஞ்​சப்​பூர் சென்​றடைகிறது. பஞ்​சப்​பூரில் இரவு தங்கி ஓய்​வெடுத்​து​விட்​டு, நாளை (ஜன.3) காலை திருச்​சி- மதுரை தேசிய நெடுஞ்​சாலை வழி​யாக விராலிமலை நோக்கி செல்​கிறது.

நடைபயணம் மேற்​கொள்​ளும் வைகோ மற்​றும் மதி​முக​வினருக்கு வழிநெடு​கிலும் மதி​முக சார்​பில் உற்​சாக வரவேற்பு அளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யினர் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT