சென்னை தலைமை செயல​கத்​தில் தமிழக முதல்​வர் விஜய்யை நேற்று சந்தித்த மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ.

 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து வைகோ வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்​டெர்​லைட் ஆலையை திறக்க அனு​ம​திக்க கூடாது என முதல்​வரை நேரில் சந்​தித்து வைகோ வலி​யுறுத்​தி​னார்.

தமிழக முதல்​வர் விஜய்யை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று தலைமை செயல​கத்​தில் சந்​தித்து பேசி​னார். அப்​போது தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் தமிழகத்​தில் எந்த பகு​தி​யிலும் சுற்றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​படுத்​தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்​கக்​கூ​டாது என வலி​யுறுத்​தி​னார்.

முதல்​வரை சந்​தித்த பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஸ்டெர்​லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவ​சா​யிகள் மற்​றும் மீனவ சங்​கங்​களும் பல போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளோம். இதையடுத்து உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து சட்​டப் போராட்​டங்​களை நடத்தி ஆலையை மூட வைத்​தோம். பின்​னர் உச்ச நீதி​மன்​றத்​தில் வேதாந்தா நிறு​வனம் அதற்கு தடை பெற்​றது.

மேலும் பல வழக்​கு​களை ஆலைக்கு எதி​ராக தொடர்ந்து போராட்​டங்​களை நடத்​தினேன். இந்த அனைத்து தகவல்​களை​யும் முதல்​வரிடம் விரி​வாக கூறினேன், அனைத்​தை​யும் பொறுமை​யாக கேட்​டறிந்​தார். மேலும் பல வகை​களில், வேறு பெயர்​களில் இந்த நச்சு ஆலையை கொண்டு வர உங்​களிடம் வரு​வார்​கள், எந்த வகை​யிலும் இந்த நச்சு தாமிர தொழிற்​சாலைக்கு முதல்​வர் அனு​மதி வழங்​கக்​கூ​டாது என அவரிடம் வலி​யுறுத்​தினேன். முதல்​வர் அனைத்​தை​யும் கூர்ந்து கவனித்​தார். நிச்​ச​யம் அனு​மதி தரமாட்டார் என எனக்கு நம்​பிக்கை உள்​ளது.

மேலும் நாடாளு​மன்​றத்​தில் நான் ஆற்​றிய உரையை தொகுத்து ஆக.4-ம் தேதி வெளி​யிட உள்​ளேன். அதை துணை குடியரசு தலைவர் வெளி​யிட தமிழக முதல்​வர் பெற்​றுக்​கொள்ள வேண்​டும் என திட்​ட​மிட்​டுள்​ளேன். அதற்​கான அழைப்​பை​யும் விடுத்​தேன்​. தூத்​துக்​குடி​யில் ஜூலை 2-ம் தேதி நச்சு ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரி​வித்து பொதுக்​கூட்​டம் நடத்​தவுள்​ளோம். அதில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், விசிக மற்​றும் பல்​வேறு விவ​சாய அமைப்​பு​கள் பங்​கேற்க உள்​ளன.

அதி​முக ஆட்சி காலத்​தில் ஸ்டெர்​லைட் ஆலை மூடப்​பட்​டது. நான் தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் ஆலையை மூட உத்​தரவு பிறப்​பிக்க உள்​ளதை முன்​கூட்​டியே உளவுத்​துறை மூலம் அறிந்து கொண்டு சாதுர்​ய​மாக அப்​போதைய முதல்​வர் ஜெயலலிதா மூடினார்.

முதல்​வர் விஜய் எளிமை​யாக, இயல்​பாக, வெளிப்​படைத்​தன்​மையோடு இருக்​கிறார். இந்த அரசு அமைந்​தத்​தில் இருந்து கமிஷன், கரப்​ஷன் என்ற சொற்​களுக்கு இடமில்​லாமல், மக்​களின் மனதை குளிர்விக்​கும், ஆரோக்​கிய​மான நிர்​வாகத்தை முதல்​வர் விஜய் நடத்தி வரு​கிறார். மதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா என்​பது யூக​மான செய்​தி. யூகங்​களுக்கு எல்​லாம் பதில் சொல்ல முடி​யாது. இடைத்​தேர்​தல், நாடாளு​மன்ற தேர்​தலில் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து பொதுக்​குழு​வில் ஆலோ​சித்து முடிவு எடுக்​கப்​படும். நல்​லது நடந்​தால் ஆதரிப்​பேன்​, அல்​லது நடந்​தால்​ எதிர்ப்​பேன்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT