| படம்: எல்.சீனிவாசன் |

 
தமிழகம்

கட்சி நிர்வாகிகளின் கருத்தையே துரை வைகோ பேசியுள்ளார்: வைகோ விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தனி சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருக்​கலாம் என மதி​முக நிர்​வாகி​கள் தங்​கள் ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தினர். அந்த கருத்​தையே துரை வைகோ பேசி​யா​தாக, வைகோ விளக்​கமளித்​துள்​ளார்.

மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசை கண்​டித்து மதி​முக பொதுச்​செய​லாளர் வைகோ தலை​மை​யில் சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

ஆர்​ப்பாட்​டத்​துக்கு பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக இருந்து பரப்​புரை செய்​தேன். திமுக வாக்​கு​களால் தான் இரண்டு தொகு​தி​களில் மதி​முக வெற்றிபெற்​றது.

திமுக வெற்​றிக்​கும் மதி​முக உதவியது. தேமுதிக, விசிக, காங்​கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகுதி கொடுத்​தார்​கள்.

மதி​முக​வுக்கு நான்கு தொகு​தி​கள் என்ற நிலை எங்​கள் கட்சி நிர்​வாகி​களுக்கு சங்​கடம் ஏற்​பட்​டது. தனி சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருக்​கலாம் என ஆதங்​கத்​தில் கட்​சி​யில் உள்ள நிர்வாகிகள் இருந்​தார்​கள். அதே ஆதங்​கத்தை தான் துரை வைகோ பேசி​யுள்​ளார்.

திமுக ஆதர​வோடு போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற காங்​கிரஸ் நன்றி கூட சொல்​லாமல் தவெகவுக்கு சென்​று​விட்​டது. காங்​கிரஸ் ராஜ்யச​பா​வில் இடம் வாங்​கி​விட்டு தற்​பொழுது மந்​திரி சபை​யிலும் இடம் வாங்கி விட்​டார்​கள். அவர்​களு​ட​னும், விசிக​வுட​னும் எங்​களை எப்​படி ஒப்​பிட்டு பேச முடி​யும்.

மேலும், தற்​போது வரை​யிலும் நாங்​கள் எந்த முடி​வும் எடுக்​க​வில்லை. அவசரப்​பட்டு எந்த முடி​வும் எடுக்க மாட்​டோம் பொதுக்​குழு​வில் பேசப்​பட்டு அதற்​குப் பிறகு​தான் முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்​ன​தாக ஆர்ப்​பாட்​டத்​தின் போது உரை​யாற்​றிய வைகோ, “கர்​நாடகா அரசு தமிழக மக்​களை வஞ்​சிக்க வேண்​டாம், மேகே​தாட்டு அணை கட்​டி​னால் தமிழகத்​தில் ஐந்து கோடி மக்​கள் பாதிப்​புக்கு உள்​ளாக நேரிடும். மத்​திய அரசு அனு​மதி கொடுக்கக் கூடாது.

தமிழக மக்​களை வஞ்​சிக்​கும் சூழலை ஏற்​படுத்த கூடாது. அணை கட்​டும் நடவடிக்கை தொடர்ந்து மேற்​கொண்​டால் அனை​வரும் கடுமை​யாக எதிர்க்க வேண்​டியது அவசி​யம்.

தமிழக முதல்​வர் சட்​டத்​தின் மூலம் தடுக்​க​வும் நினைக்​கலாம். தமிழக அரசு ஒருநாள் கடையடைப்பு செய்​தால் கூட தமிழகம் ஒட்டு மொத்​த​மாக எதிர்க்​கிறது என்ற எண்​ணம் உரு​வாகும். இதற்கு முன் இருந்த ஆளுநர்​களை விட தற்​போது இருக்​கும் ஆளுநர் மோச​மாக இருக்​கிறார்.

திரு​வள்​ளுவர் சாதி, மதம் எது​வும் இல்​லாதவர். அவருக்கு காவி உடை அணி​வித்​ததற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்​றுகை​யிட்டு கருப்பு கொடி ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளோம்” என்​றார்.

SCROLL FOR NEXT