திருமாவளவன்

 
தமிழகம்

நீட் விலக்கு மசோதாவை ஏற்க குடியரசுத் தலைவரை அரசு வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘​தி​முக ஆட்​சி​யில் நிறைவேற்​றப்​பட்ட நீட் விலக்கு மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஏற்​ப​தற்கு தவெக அரசு வலி​யுறுத்த வேண்​டும்’ என திரு​மாவளவன் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

நீட் தேர்வை ரத்து செய்​யக்​ கோரி, சென்னை தி.நகரில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி அலு​வல​கத்​தில் தமிழக கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யினர் தொடர் முழக்க போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த போராட்டத்​தில் மாணவர்​கள் மற்​றும் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள் பங்​கேற்​றனர். இந்​நிலை​யில், விசிக தலை​வர் திரு​மாவளவன் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீட் தேர்வே கூடாது என்​பது​ தான் தமிழக மாணவர்​கள், அரசி​யல் கட்​சிகள், தமிழக அரசின் கோரிக்​கை. திமுக ஆட்​சி​யின்​போது நீட் தேர்​வுக்கு எதி​ரான சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்ட நிலை​யில், இப்​போதைய அரசும் அதை வழிமொழிய வேண்​டும். அந்த சட்ட மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஏற்​ப​தற்கு வலி​யுறுத்த வேண்​டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இருக்​கிறது. இன்று அரசி​யல் சார்​பற்ற முறை​யில் மாணவர்​கள், இளைஞர்​கள், தன்​னார்​வலர்​கள் என்று பலரும் களத்​தில் இறங்கி இருக்​கிறார்​கள். இவர்​களின் போராட்​டம் நாளுக்​கு​நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்​திய அரசு இதைப் பரிசீலிக்க வேண்​டும்.

முதல்வர் மீது நம்பிக்கை: நம்​முடைய கோரிக்​கை​தான் தமிழக அரசின் கோரிக்கை என்​பதை நாம் அறிகிறோம். முதல்​வர் இதற்கு எதி​ராக இல்​லை. மாணவர்​களின் போராட்​டத்​துக்கு எதி​ரான நிலைப்​பாட்டை தமிழக அரசு ஒரு​போதும் எடுக்​காது, பாஜக அரசின் நிலைப்​பாட்​டுக்கு ஒரு​போதும் ஆதரவு அளிக்​காது என்​கிற நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் அதை முதல்​வரோ அல்​லது அவருடைய சார்​பிலோ வெளிப்​படுத்​து​வார்​கள் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்​ன​தாக, திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி நேரில் சென்று ஆதரவு தெரி​வித்​தார். தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, “நீட் ஒழிக்​கப்பட வேண்​டும் என்ற நிலைப்​பாட்​டை​தான் எப்​பொழுதுமே எடுத்​திருக்​கிறோம் திமுக ஆட்சி காலத்​தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்​றினோம்.

ஆனால் முதலில் ஆளுநர் கையெழுத்து போட மறுத்​தார், தற்​போது குடியரசு தலை​வரிடம் நிலு​வை​யில் உள்​ளது. நாடு முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மாணவர்​கள் மீது மத்​திய அரசு வன்​முறையை கட்​ட​விழ்த்து உள்​ளது. தமிழகத்​தி​லும் அதே​போல நடப்​பது அதிர்ச்சி அளிக்​கிறது. மத்​திய அரசின் நடவடிக்​கைகளுக்கு தமிழக அரசு அமைதி காப்​ப​தைப்பார்க்​கும்​போது ‘இது மவுன​மான நேரம்’ பாடல்​தான் நினை​வுக்கு வரு​கிறது” என்​றார்.

SCROLL FOR NEXT