தமிழகம்

அய்யா, சின்னவர், அக்கா நகர்வுகள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘அ​தி​காரப் போட்​டி​யில் ஆளுக்​கொரு பக்​கம் ஆள், அம்​பு, சேனையை திரட்டி நின்ற ‘பழக்’ கட்​சி​யின் அப்​பா​வும் மகனும் அண்மை​யில் ஆரத் தழுவி ஆற்​றாமையை கண்​ணீ​ராய் கொட்டினார்​கள். ஆனால், இந்த சங்​கமத்தை ‘அய்​யா’​வின் ‘மதியான’ மகளும் அவரது விசு​வாசிகளும் ஏற்​றுக்​கொள்ள முடியாமல் இன்​ன​மும் தகிப்​பில் இருக்​கிறார்​களாம். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி, கட்​சி​யின் ஆலோ​சனைக் கூட்​டம் ஒன்​றுக்கு ஏற்​பாடு செய்​தா​ராம் ‘சின்​னவர்’.

இந்​தக் கூட்​டத்​துக்கு ‘மதி​யான’வருக்​கும் அவருக்கு உற்ற துணையாய் நிற்​கும் ‘மணி​யான’வருக்​கும் அழைப்பு இல்​லை​யாம். அதேசம​யம், ‘அய்​யா’ தரப்​பின் ‘சங்​கர​மான’ துணைப் பொறுப்பாளருக்கு அழைப்பு விடுத்​திருந்​தார்​களாம். ஆனால், “அவர்கள் இல்​லாமல் தன்​னால் வரமுடி​யாது” என்று அவர் அழைப்பை ஏற்க மறுத்​து​விட்​டா​ராம்.

இதனால், தோட்​டத்​துக்​குள் தேவையற்ற குழப்​பம் வரலாம் என்பதால் ஆலோ​சனைக் கூட்​டத்​தையே ரத்து செய்​து​விட்​டா​ராம் ‘சின்​னவர்’. மருத்​துவ சிகிச்​சை​யில் இருக்​கும் ‘அய்​யா’ தோட்​டம் திரும்​பியதும் கூட்​டத்தை வைத்​துக் கொள்​ளலாம் என்று சொல்லி இருக்​கிறா​ராம். ‘சின்​னவர்’.

இதனிடையே, ஆளுக்​கொரு பக்​க​மாய் கட்சி கட்​டிக் கொண்டு நிற்கும் ‘மதி​யான’ அக்​காவை​யும் தம்பி ‘சின்​னவரை​யும்’ சமாதானம் செய்​து​வைக்க தோட்​டத்து உறவு​கள் கூடிப் பேசி வருகிறார்​களாம்.

இதையடுத்​து, இவர்​கள் எல்​லாம் எப்​படி​யும் ஒன்​றுக்​குள் ஒன்​றாகி விடு​வார்​கள் என்று ஊகித்​து​விட்ட ‘மணி​யான’வரும் மாம்​பழத்து ஊரின் ‘அருளான’வரும் தனி ரூட் எடுப்​பது குறித்து யோசித்து வருகிறார்​களாம். இவர்​கள் அறி​வால​யத்​துக்கு அப்​ளி​கேஷன் போட்​டாலும் ஆச்​சரியமில்​லை என்​கிறார்​கள்​.

SCROLL FOR NEXT