தமிழகம்

மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக ஜேசிடி.பிர​பாகர் போட்​டி​யின்றி நேற்று தேர்​வா​னார். அவரை வாழ்த்தி சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி பேசி​ய​தாவது: வரலாற்​றுச் சிறப்​புமிக்க இந்த பேர​வை​யின் தலை​வர் மற்​றும் துணைத்​தலை​வ​ராக தேர்​வான இரு​வருக்​கும் எனது வாழ்த்​துகள்.

பேர​வைத்​தலை​வர் 3 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ள​தால் தங்​களுக்கு அவை​யின் மரபு​களும், விதி​களும் புதி​யது கிடை​யாது. எதிர்க்​கட்​சிகளை​யும் அரவணைத்​து, நீங்​கள் நடுநிலை​யோடு செயல்​படு​வீர்​கள் என்​பதே எங்​கள் எதிர்​பார்ப்​பாகும். இந்த அவை​யில் எதிரி கட்​சி​யாக இல்​லாமல் ஒரு ஆக்​கப்​பூர்​வ​மான எதிர்க்​கட்​சி​யாக திமுக நிச்​ச​யம் செயல்​படும்.

வாக்​களித்த மக்​களுக்கு மட்​டுமின்​றி, வாக்​களிக்​காத மக்​களுக்​கு​மான அரசாக​வும் செயல்பட வேண்​டும். முதல்​வர் விஜய்​யும், நானும் ஒரே கல்​லூரி​யில் படித்த பழைய மாணவர்​கள். ஒரே கல்​லூரி​யில் நாம் படித்​தா​லும் அரசை நடத்​து​வ​தில் திமுக​தான் சீனியர் பேட்ச். 1967-லேயே ஆட்​சிக்கு வந்​தது திமுக.

ஆகவே, நாங்​கள்​தான் சீனியர்​ஸ். அந்த அடிப்​படை​யில் எங்​களின் அறிவை​யும், அனுபவத்​தை​யும் நாங்​கள் பகிர்ந்​து​கொள்​ளத் தயா​ராக இருக்​கிறோம். அதை ஏற்க நீங்​களும் தயா​ராக இருங்​கள். ஏனெனில் நமக்கு எப்​போதுமே மாநிலத்​தின் நலன்​தான் முக்​கி​யம்.

இம்​முறை கிட்​டத்​தட்ட ஆளுங்​கட்​சிக்கு இணை​யான எதிர்க்​கட்சி வரிசை​யும் வலிமை​யாக அமைந்​துள்​ளது. இதன்​மூலம் இந்த புதிய அரசை வழிநடத்த வேண்​டும் என மக்​கள் நமக்​குச் சொல்​லி​யிருக்​கிறார்​கள். அதற்​கேற்ப எங்​கள் பணி​கள் நிச்​ச​யம் இருக்​கும்.

புதிய அரசு பதவி​யேற்பு நிகழ்வில் தமிழ்த்​தாய் வாழ்த்து 3-வது இடத்​துக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது. இது தமிழக மக்​கள் மத்​தி​யில் பெரும் கோபத்​தை​யும், அதிர்ச்​சி​யை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதற்கு ஆளுங்​கட்​சி​யும் ஒரு விளக்​கத்தை கொடுத்​துள்​ளது.

பாஜக ஆட்​சிக்கு வந்​துள்ள மேற்​கு​வங்க மாநிலத்​தில் பதவி ஏற்பு நிகழ்ச்​சி​யின்​போது வந்தே மாதரம் பாடல் பாடப்​பட​வில்லை. ஆனால் இங்கே தமிழகத்​தில் அது பாடப்​பட்​டுள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் ஆளுந​ராக ஆர்​.என்​.ரவி இருக்​கிறார்.

அவர் இங்கே ஆளுந​ராக இருந்​த​போது தமிழக சட்டப்பேர​வை​யில் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்​டுமென மரபையே மாற்​றச் சொன்​னார். அதை நாங்​கள் உறு​தி​யாக மறுத்​த​தால், 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்​டு​கள் அவர் பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்​தார்.

பேர​வை​யில் மட்​டுமல்ல, தமிழகத்​தில் நடை​பெறக்​கூடிய எந்த நிகழ்ச்​சி​யாக இருந்​தா​லும் சரி, தமிழ்த்​தாய் வாழ்த்து என்​றைக்​கும் இரண்​டாவது இடத்​துக்கு தள்​ளிப்​போக விடக்​கூ​டாது. இந்த அரசு அதற்கு அனு​ம​திக்​கக்​கூ​டாது. மிக​வும் விழிப்​போடு இருந்து நமது உரிமை​யை, மரபைப் பாது​காக்க வேண்​டும்.

தேர்​தலில் ஆட்சி அமைப்​ப​தற்​கான பெரும்​பான்​மையை ஆளுங்​கட்​சிக்கு மக்​கள் வழங்​காமல் போனாலும், திமுக தலை​மை​யில் தேர்​தலைச் சந்​தித்து வென்ற தோழமை கட்​சிகளின் ஆதர​வோடு ஆட்சி அமைத்​துள்ள புதிய அரசுக்கு மீண்​டும் எனது வாழ்த்​துகள். மேலும், மக்​களைப் பிரிக்​கும் சனாதனம்​ நிச்​ச​யம்​ ஒழிக்​கப்​பட வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT