தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் சரிவை மீட்டெடுத்த ‘நான் முதல்வன்’: உதயநிதி பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ​யுபிஎஸ்சி தேர்​வு​களில் பீடி சுற்​றும் தொழிலாளி மகள் முதல் விவ​சாயி மகள் வரை தேர்ச்சி பெற்​று​வதற்​குக் காரண​மாக அமைந்த ‘நான் முதல்​வன்’ திட்​டம், யுபிஎஸ்சி தேர்​வு​களில் தமிழகத்​தின் சரிவை மீட்​டெடுத்​த​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சமூக வளர்ச்​சிப் பாதை​யில் கடந்த அரை நூற்​றாண்​டுக்​கும் மேலாக நாட்​டிலேயே தமிழகம் முன்​னணி​யில் இருந்து வரு​கிறது. கல்​வி​யும், வாய்ப்​பு​களும் அனை​வருக்​கும் சமமாக கிடைக்க வேண்​டும் என்ற திரா​விட இயக்​கத்​தின் அடிப்​படைக் கொள்​கையே இந்த முன்​னேற்​றத்​துக்கு காரண​மாகும்.

எனினும், 2017-ம் ஆண்​டுக்கு பிறகு மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்சி) நடத்​தும் குடிமைப் பணி தேர்​வு​களில் தமிழக மாணவர்​களின் பங்​களிப்பு படிப்​படி​யாகக் குறைந்து வந்​தது. 2021-ல் தேர்ச்சி விகிதம் 27-ஆக சரிந்​ததை கண்​டறிந்த தமிழக அரசு, அதை சரிசெய்ய ‘நான் முதல்வன் போட்​டித் தேர்​வு​கள் பிரிவு’ என்ற புதிய முன்​னெடுப்பை 2023-ல் தொடங்​கியது.

பெருநகரங்​களுக்கு வெளியே வசிக்​கும் கிராமப்​புற மாணவர்​களுக்கு தரமான பயிற்​சி​யும், வழி​காட்​டு​தலும் கிடைக்​காததே சரிவுக்​குக் காரணம் என்​பதை உணர்ந்து இந்த திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது. சென்​னை, கோவை, மதுரை​யில் தங்​குமிடம் மற்​றும் உணவுடன் கூடிய சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

659–ஆக உயர்வு... இதன் விளை​வாக, 2023-24-ம் ஆண்​டில் 453 பேரும், 2024-25-ம் ஆண்​டில் 559 பேரும் தேர்ச்சி பெற்​றனர். நடப்பு 2025-26-ம் ஆண்​டில் தேர்ச்​சி​யாளர்​கள் எண்​ணிக்கை 659-ஆக உயர்ந்​துள்​ளது. நடப்​பாண்​டில் மட்​டும் 155 மாணவர்​கள் நேர்​முகத் தேர்​வுக்கு தகுதி பெற்​றுள்​ளனர்.

அவர்​களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்​திய குடிமைப் பணி பயிற்சி மையத்​தில் பயின்​றவர்​கள் என்​ப​தே, அரசின் திட்​டத்​துக்கு கிடைத்​துள்ள மகத்​தான வெற்​றி​யாகும். குடிமைப் பணித் தேர்​வு​களை தொடர்ந்து தற்​போது எஸ்​எஸ்​சி, ரயில்வே மற்​றும் வங்​கித் தேர்​வு​களுக்​கும் இத்​திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

வங்கி அதிகாரி... தென்​காசியை சேர்ந்த பீடி சுற்​றும் தொழிலா​ளி​யின் மகள் இன்பா ஐபிஎஸ் அதி​காரி​யானதும், தரு​மபுரியைச் சேர்ந்த விவ​சாயக் குடும்​பத்​தைச் சேர்ந்த புவனேஸ்​வரி வங்கி அதி​காரி​யானதும் இத்​திட்​டத்​தின் உண்​மை​யான வெற்​றிக்கு சான்​றுகளாக அமைந்​துள்​ளன.

பொருளா​தா​ரச் சூழல் அல்​லது வசிப்​பிடம் ஒரு​வரது வெற்​றிக்​குத் தடை​யாக இருக்​கக் கூடாது என்​ப​தில் உறு​தி​யாக உள்ள திமுக அரசு, தகுதி மற்​றும் வெளிப்​படைத்​தன்​மை​யின் அடிப்​படை​யில் மாணவர்​களைத் தேர்வு செய்​து, அவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் தொடர்ந்து வழங்​கும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT