அம்​ரித் பாரத் ரயில் | கோப்புப்படம்

 
தமிழகம்

திருச்சி, நாகர்கோவிலுக்கு இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மேற்​கு​வங்​கம் நியூ ஜல்​பைகுரி - நாகர்​கோ​வில், நியூ ஜல்​பை​குரி - திருச்சி இடையே என 2 அம்​ரித் பாரத் ரயில் சேவை​கள் நேற்று தொடங்கி வைக்​கப்​பட்​டன. இதன் விவரம் வரு​மாறு:

நியூஜல்​பை​குரி - நாகர்​கோ​வில் அம்​ரித் பாரத் ரயி​லில் 8 இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி கொண்ட பெட்​டிகள், 11 பொதுப் பெட்​டிகள் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில் நியூஜல்​பை​குரி​யில் புறப்​பட்டு பாலசோர், கட்​டாக், புவனேஸ்​வர், விஜய​வா​டா, கூடூர், ரேணி​குண்​டா, காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், கோவை, பொள்​ளாச்​சி, உடுமலைப்​பேட்​டை, பழநி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், சாத்​தூர், கோவில்​பட்டி வழி​யாக நாகர்​கோ​விலை அடை​யும். இந்த ரயி​லின் முதல் சேவை நாகர்​கோ​விலில் இருந்து ஜன.25-ம் தேதி​யும் நியூஜல்​பைகுரி​யில் இருந்து ஜன.28-ம் தேதி​யும் தொடங்​கும்.

நியூஜல்​பைகுரி - திருச்சி அம்​ரித் பாரத் ரயில் நியூஜல்​பைகுரி​யில் புறப்​பட்டு பாலசோர், கட்​டாக், புவனேஸ்​வர், விஜய​வா​டா, கூடூர், சென்னை எழும்​பூர், தாம்​பரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​ப்பா​திரிபுலியூர், சிதம்​பரம், மயி​லாடு​துறை, கும்​பகோணம், தஞ்​சாவூர் வழி​யாக திருச்​சியை அடை​யும். இந்த ரயி​லின் முதல் சேவை திருச்​சி​யில் ஜன.28-ம் தேதி​யும், நியூ ஜல்​பை​குரி​யில் இருந்​து ஜன.30-ம்​ தேதி​யும்​ தொடங்​கும்​.

SCROLL FOR NEXT