விசிக தலை​வர் திரு​மாவளவன்

 
தமிழகம்

விசிக ஆதரவை கோரிய விஜய்: “இடதுசாரிகள் முடிவை அறிந்து முடிவெடுப்போம்” - திருமாவளவன்

செய்திப்பிரிவு

சென்னை: விசிக​வின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலை​யில் இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்கள் முடிவெடுப்போம் என திரு​மாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாகி தவெக 108 இடங்​களில் வென்​றுள்​ளது. ஆட்​சி​யமைக்க தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் விஜய் ஆட்​சி​யமைக்க மற்ற கட்​சிகளின் ஆதர​வைக் கோரி வரு​கிறார்.

இந்​நிலை​யில் நேற்று காங்​கிரஸ் தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்துள்​ளது. மேலும் விசிக மற்​றும் இடது​சாரி கட்​சிகள் தலா 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றிருக்​கும் நிலை​யில் அவர்​களின் ஆதர​வை​யும் விஜய் கோரி​யுள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​கள், தற்​போது கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்து தவெக​வுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுத்​துள்​ளது.

இதுகுறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்​பி​யிருக்​கிறார். இடது​சாரி கட்​சிகளுக்​கும் அவர் கடிதம் எழு​தி​யிருக்​கிறார். இது தொடர்​பாக கட்​சி​யின் முன்​னணி பொறுப்பாளர்​களோடு கலந்​தாய்வு செய்த பின்​னர்​தான் முடிவெடுக்க முடி​யும். விஜய் மீது மக்​கள் நம்​பிக்கை வைத்து வாக்களித்​திருக்​கிறார்​கள். அந்த நம்​பிக்​கைக்​குப் பாத்​திர​மாக அவர் நல்​லாட்​சி​யைத் தரு​வார் என்று நம்​பு​கிறேன். திமுக உடனான கூட்​ட​ணி​யைப் பொறுத்​தவரை, நாங்​கள் கூட்டணியுடன் நீண்ட கால​மாக பயணித்து வந்​திருக்​கிறோம். இப்​போதும் அந்த நட்பு நீடிக்​கிறது.

ஆட்​சி​யில் பங்கு.. பாஜக ஒரே ஓர் இடத்​தில்​தான் வெற்றி பெற்று இருக்​கிறது. இப்​படி இருக்​கை​யில் தவெக ஆட்​சி​யமைப்​ப​தில் எப்​படி தலை​யீடு செய்ய முடி​யும் என்று தெரிய​வில்​லை, காங்​கிரஸின் நிலைப்​பாடு குறித்து நான் கருத்து சொல்ல விரும்​ப​வில்​லை.

ஆட்​சி​யில் பங்கு, அதி​காரத்​தில் பங்கு என்​பது எங்​கள் கோரிக்​கை, நிலைப்​பாடு. இந்த சூழலை உரு​வாக்​கிய தமிழக மக்​களுக்கு நன்றி சொல்ல கடமைப்​பட்​டிருக்​கிறோம். ஆனால் அமைச்​சர​வை​யில் இடம் என்ற ஒற்றை காரணத்​துக்​காக மட்​டும் முடிவை எடுக்க முடி​யாது. இதில் எங்​களுக்கு உள்ள நிறை, குறை, கட்​சி​யின் எதிர்​காலம் என அனைத்​தை​யும் சீர்​தூக்​கிப் பார்த்து முடி​வெடுக்க வேண்​டும். ஆட்​சி​யில் பங்​கு, அதி​காரத்​தில் பங்கு என்ற கோஷத்தை மட்​டுமே வைத்து முடிவு எடுக்க முடி​யாது என்​ப​தால் ஏற்​கெனவே விஜய் அந்​தக் கோரிக்​கையை கூறிய​போது ஏற்க முடி​யாத சூழ்​நிலை உரு​வானது. இரு​வரின் எதிர்​கால அரசி​யல் எப்​படி போகும் என்​ப​தைக் கணக்​கில் கொண்டு அதை ஒட்டி எங்​கள் முடிவு இருக்​கும். இது தொடர்பாக இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்களும் முடிவெடுப்போம், என திரு​மாவளவன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறாது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT