தமிழகம்

தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்க பிப்ரவரியில் தவெகவும் பயணம்

செய்திப்பிரிவு

தேர்​தல் அறிக்கை தயார் செய்​வது தொடர்​பாக, பொது​மக்​களின் கருத்​துகளை கேட்க தவெக தேர்​தல் அறிக்கை குழு பிப்​. 1-ம் தேதி முதல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறது.

தமிழக மக்​களின் முன்​னேற்​றத்​தை​யும், மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சி​யை​யும் இலக்​காகக் கொண்​டு, மக்​களுக்​கான தேர்​தல் அறிக்கை மக்​களிடம் இருந்தே உரு​வாக வேண்​டும் என்று கூறி தவெக, தேர்​தல் அறிக்கை தயா​ரிப்​புப் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளது. இதற்​காக, தேர்​தல் அறிக்கை தயா​ரிப்பு குழு​வை​யும் விஜய் நியமித்​துள்​ளார். அதில் தவெக கொள்​கைப் பரப்பு பொதுச்​ செய​லா​ளர் அருண்​ராஜ், துணைப் பொதுச் செய​லா​ளர் ராஜ்மோகன், முன்​னாள் எம்​எல்​ஏ-​வான ஜேசிடி பிர​பாகர் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் 12 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

          

இந்​நிலை​யில், பொது​மக்​களின் தேவை​களை​யும் கோரிக்கைகளை​யும் நேரடி​யாகக் கேட்​டறிந்​து, தேர்​தல் அறிக்​கையை தயார் செய்ய, தேர்​தல் அறிக்​கைக் குழு​வினர் தமி​ழ​கம் முழு​வதும் ஐந்து மண்​டலங்​களாகப் பிரிந்து சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பொதுச்​செய​லா​ளர் என்​.ஆனந்த் அறி​வித்​துள்​ளார். அதன்​படி, ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும் உள்ள பொது​மக்​கள், விவ​சாய சங்​கங்​கள், நெச​வாளர்​கள், மீன​வர்​கள், மாண​வர்​கள், இளைஞர்​கள், தொழில் அமைப்​பு​களை சேர்ந்​தோரை சந்​தித்து அக்​குழு கருத்​துகளை கேட்க உள்​ளது.

அதன்​படி, பிப்​.1-ம் தேதி மதுரை, தேனி, திண்​டுக்​கல் விருதுநகர், சிவகங்​கை, நெல்​லை, தென்​காசி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​களை மதுரை​யிலும், பிப்​.4-ம் தேதி விழுப்​புரம், கடலூர், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி ஆகிய மாவட்​டங்​களை சேர்ந்த மக்​களை கடலூரிலும், பிப்​.7-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்​பூர், சேலம், நாமக்​கல், கரூர், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, நீல​கிரி மாவட்ட மக்​களை கோவை​யிலும் தேர்​தல் அறிக்​கைக் குழு​வினர் சந்​தித்து கருத்​துகளை கேட்​டறிகின்​ற​னர்.

தொடர்ந்து பிப்​.9-ம் தேதி திருச்​சி, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, அரியலூர், பெரம்​பலூர், புதுக்​கோட்டை மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​களை திருச்​சி​யிலும், பிப்​.11-ம் தேதி சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், வேலூர், திருப்​பத்​தூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​களை சென்​னை​யிலும் இக்​குழு சந்​தித்து கருத்​துகளை கேட்க உள்​ளது.

பொது​மக்​களிடம் இருந்து பெ​றப்​படும் தரவு​களின் அடிப்​படை​யில் தமிழக மக்​களை​யும், ஒட்டு மொத்த மாநிலத்​தை​யும் வளர்ச்​சிப் பாதை​யில் கொண்டு செல்​லும் வகை​யில் தேர்​தல் அறிக்கை தயார் செய்​யப்பட இருப்​ப​தாக என்​.ஆனந்த் தெரி​வித்​துள்​ளார்.

பிப்.2-ல் மூன்றாம் ஆண்டு விழா: தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். விஜய் தலைமையில், தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.2-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மக்களுக்காக உழைத்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT