“விஜய் யாருக்காக உச்சத்தில் இருந்து வந்துள்ளார்?” - பழனிசாமி கேள்வி

சேலம் மாவட்​டம் ஓமலூரில் அதி​முக கட்சி அலு​வல​கத்​தில் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

சேலம் மாவட்​டம் ஓமலூரில் அதி​முக கட்சி அலு​வல​கத்​தில் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

Updated on
2 min read

சேலம் மாவட்​டம் ஓமலூரில் அதி​முக கட்சி அலு​வல​கத்​தில் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்​தவர்​கள் அதி​முக-​வில் இணை​யும் நிகழ்வு நேற்று நடந்​தது. இதில் பங்​கேற்ற கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பல்​வேறு கட்​சிகளில் இருந்து விலகி அதி​முக-​வில் பலரும் சேர்ந்து வரு​கின்​ற​னர். அதி​முக-​வின் வெற்றி பிர​காச​மாக உள்​ளது. அதி​முக பொதுக்​குழு​வில் ஏகமன​தாக எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி ஓபிஎஸ் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டிருக்​கி​றார். அதி​முக-வுக்கு துரோகம் இழைத்​தவர் என்​ப​தால் பொதுக்​குழு கூடி முடி​வெடுத்​து, அடிப்​படை உறுப்​பினர் பதவி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார் என்​ப​தால் மீண்​டும் அவரை கட்​சிக்​குள் இணைக்க வாய்ப்​பில்​லை. அது, 2,500-க்​கும் மேற்​பட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கூடி எடுத்த நடவடிக்​கை; பொதுச்​செய​லா​ளர் எடுத்த நடவடிக்கை இல்​லை. வரும் தேர்​தலில் அதி​முக தான் வெற்​றி​பெற்று ஆட்சி அமைக்​கும்.

இன்​னும் பல கட்​சிகள் அதி​முக கூட்​ட​ணிக்கு வர வாய்ப்​பிருக்​கிறது. பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. கூட்​டணி இறுதி செய்​யப்​பட்​ட​வுடன் முறை​யாக அறி​விப்​போம். யாருக்கு எத்​தனை சீட், எந்​தெந்த தொகு​தி​கள் என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும்.

திமுக அரசை அகற்ற வேண்​டும் என்று மக்​கள் முடிவு செய்து விட்​டார்​கள். அதி​முக ஆட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட திட்​டங்​கள் மக்​களுக்​கான​தாக இருந்​தது. ஆனால், திமுக ஆட்​சி​யில் தினம்​தோறும் போட்டோ ஷூட் மட்​டும் நடக்​கிறது. அத்​துடன் அது முடிந்து விடு​கிறது. திட்​டங்​களை நிறை​வேற்ற 52 குழுக்​களை போட்ட நிலை​யில், வெள்ளை அறிக்கை கேட்​டால் விளக்​கம் இல்​லை. வெற்று அறி​விப்​பு​களை விட்டு கவர்ச்​சிகர​மாக திட்​டங்​களை அறி​வித்​து, மக்​களை ஏமாற்றி ஊழல் அரசாக திமுக அரசு உள்​ளது. திமுக அரசில் ரூ.4 லட்​சம் கோடிக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்​துள்​ளோம்.

2026-2027 நிதி​யாண்​டுக்​கான திட்​டங்​களுக்கு சட்​டப்​பேரவை ஒப்​புதல் பெறாமல் திட்​டத்​திற்கு நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளனர். விதி​களை மீறி முறை​கேடு நடை​பெற்​றுள்​ளது. முறை​கேடுகளை எவ்​வித அச்​ச​மும் இல்​லாமல் செய்​கி​றார்​கள். அதி​முக ஆட்​சிக்கு வந்​தவுடன் விதி​முறைக்கு முரணாக விடப்​பட்ட டெண்​டர்​கள் ரத்து செய்​யப்​படும். நிரந்தர டிஜிபி-யைக் கூட நியமிக்​காமல் பொறுப்​பற்ற அரசாக திமுக அரசு உள்​ளது.

டெல்​லிக்கு நாங்​கள் அடிமை இல்​லை. திமுக தான் அடிமை​யாக உள்​ளது. இன்​றைக்​கு, காங்​கிரஸ் தலை​மை​யைப் போய் கெஞ்​சும் நிலைக்கு திமுக வந்து விட்​டது. திமுக கூட்​ட​ணி​யில் குழப்​பம் வந்​து​விட்​டது. கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் இருக்​குமா என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது. திமுக தேர்​தல் அறிக்கை கதா​நாயகி​யாக இருக்​கும் என கனி​மொழி கூறி​யுள்​ளார். எந்​தப் படத்​தில் நடித்​தார் என தெரிய​வில்​லை. நான்​கில் ஒரு பங்கு கோரிக்​கை​யைக் கூட நிறை​வேற்ற முடிய​வில்​லை. சென்​ற​முறை​யும் கனி​மொழி​தான் தேர்​தல் அறிக்​கை​யைத் தயா​ரித்​தார். கொடுத்த வாக்​குறு​தியை நிறை​வேற்​றாத​தால் மக்​களை திமுக-​வால் சந்​திக்க முடிய​வில்​லை.

விஜய்க்கு ரசிகர்​கள் வரத்​தான் செய்​வார்​கள். அவர் ஒரு சிறந்த நடிகர்; அதில் மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், சிறந்த அரசி​யல்​வாதி நாங்​கள் தான். மக்​களுக்கு சேவை செய்​வது நாங்​கள் தான். கரூரில் 41 உயிர்​கள் போய்​விட்​டது. அவர்​கள் யாருக்​காக உயி​ரிழந்​தார்​கள். விஜய்யை பார்ப்​ப​தற்​காக, அவர் பேச்சை கேட்​ப​தற்​காக வந்த கூட்​டம்​தான் அது.

அதனால், பாதிக்​கப்​பட்​ட​வர்களை பார்க்க நேரடி​யாக சென்​றிருக்க வேண்​டும். நாங்​கள் போனோம். எந்​தக் கட்சி என்று நாங்​கள் பார்க்​க​வில்​லை. விலை மதிக்க முடி​யாத உயிர்​கள் போய்​விட்​டன. அந்த குடும்​பங்​களுக்கு எங்​களால் முடிந்த ஆறு​தலைக் கூறினோம். அந்த ஆறு​தலைக் கூட உங்​களால் கூற முடிய​வில்​லை. உச்​சத்​தில் இருந்து வந்​துள்​ள​தாக கூறும் விஜய் யாருக்​காக உச்​சத்​தில் இருந்து வந்​துள்​ளார்?

ஜெயலலிதா இருந்​த​போது சுனாமி வந்​தது. அதி​காரி​கள் எச்​சரிக்​கை​யை​யும் மீறி மக்​களை போய்ப் பார்த்​தார். புயல் வந்​தவுடன் மூன்று மாதம் அங்​கேயே தங்கி அமைச்​சர்​கள் சீரமைத்​தனர். ஒரு அரசாங்​கம் எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தற்கு முன்​மா​திரி அதி​முக அரசாங்​கம்​தான். தமி​ழ​கம் வளர்​வதற்கு அதி​முக ஆட்​சியே காரணம். வாக்​குறு​தி​கள் குறித்து தூய்​மைப் பணி​யாளர்​கள் கேட்​டால், அதற்கு ஆட்​சி​யில் இருப்​பவர்​கள் சர்​வா​தி​கார​மாக பதில் சொல்​கி​றார்​கள். வரும் தேர்​தலில் திமுக-வுக்கு தமிழக மக்​கள் தகுந்த பதிலடி கொடுப்​பார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>சேலம் மாவட்​டம் ஓமலூரில் அதி​முக கட்சி அலு​வல​கத்​தில் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களுக்கு நேற்று பேட்டியளித்தார்.</p></div>
“எங்களைப் பார்த்தால் பாவமாகத் தெரியவில்லையா?” - ஓபிஎஸ் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in