விஜய் படத்தை காண்பித்து பக்தர்களிடம் ஆதரவு கேட்டு வீடியோ எடுத்த தவெகவினர்.

 
தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் வீடியோ எடுத்த தவெகவினர்: போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் வளாகத்​துக்​குள் தடையை மீறி வீடியோ எடுத்​தது தொடர்​பாக தவெக​வினர் மீது, கோயில் உள்​துறைக் கண்​காணிப்​பாளர் போலீ​ஸில் புகார் செய்​துள்​ளார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் வளாகத்​தில் செல்​போன் பயன்​படுத்​து​வதற்​கும், வீடியோ மற்​றும் புகைப்​படம் எடுப்​ப​தற்​கும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், கோயி​லில் தவெக தலை​வர் விஜய் புகைப்​படத்​துடன் சிலர் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளி​யிட்​டிருந்​தனர்.

அந்த வீடியோ​வில், ‘தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு அரோக​ரா. 2026-ல் தவெக ஆட்​சிக்கு வந்த பிறகு அறநிலை​யத் துறையை கையில் எடுப்​போம். கோயி​லில் இந்த மாதிரி வரிசை எல்​லாம் இருக்​காது. அனை​வருக்​கும் பாஸ் தான்” என்று பிரச்​சா​ரம் செய்​திருந்​தனர். இந்​தக் காட்​சிகள் இணை​யதளத்​தில் பரவின.

இதையடுத்​து, கோயில் உள்​துறை கண்​காணிப்​பாளர் விவேக், இது தொடர்​பாக போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார். அதில் “இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் ஒரு நபர் பதி​விட்​டுள்ள காணொலி​யில் ஓர் அரசி​யல் கட்சி பற்றி வெளிப்​படை​யாகப் பிரச்​சா​ரம் செய்​யும் வகை​யிலும், அரசி​யல் கோஷங்​களை உரக்க முழங்​கி​யும் பதி​விட்​டுள்​ளார்.

இந்த செயல் கோயில்​கள் மற்​றும் வழி​பாட்​டுத் தலங்​களில் அரசி​யல் நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றத்​தால் வழங்​கப்​பட்​டுள்ள தெளி​வான உத்​தர​வு​களை அறிந்​தும், திட்​ட​மிட்டு மீறிய குற்​ற​மாகும். மேலும், இந்த வீடியோ​வில் இந்து சமய அறநிலை​யத் துறைக்கு எதி​ராக​வும், அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்​தும் நோக்​கத்​துட​னும், உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ராக​வும் கோஷங்​களை எழுப்​பி, அதைப் பதி​விட்​டுள்​ளார். இது சுப்​பிரமணிய சுவாமி கோயில் போன்ற புனித தலத்​தின் ஆன்​மிகச் சூழல், வழி​பாட்டு ஒழுங்கு மற்​றும் பொது அமை​தியை குலைக்​கும் நோக்​கத்​துடன் மேற்​கொள்​ளப்​பட்ட செய​லாகும்.

இந்த செயல் இந்​திய தண்​டனைச் சட்​டத்​தின் கீழ் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும். எனவே, மேற்​கண்ட வீடியோவை பதி​விட்ட நபர் மீது உடனடி​யாக வழக்​குப் பதிவு செய்​து, அந்த வீடியோவை சமூக வலை​தளத்​தில் இருந்து அகற்ற வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக திருச்​செந்​தூர் கோயில் காவல் நிலைய போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT