தமிழகம்

வாக்களிக்க சொந்த ஊர் செல்ல வசதியாக சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லா ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தலில் வாக்​களிக்க சொந்த ஊருக்கு சென்று திரும்​பும் பயணி​கள் வசதிக்​காக, சென்​னை​யில் இருந்து மதுரைக்கு முன்​ப​தி​வில்லா சிறப்பு ரயில் இன்று இயக்​கப்​படு​கிறது. போத்​தனூருக்​கும் சிறப்பு ரயில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூரில் இருந்து இன்று (ஏப்​.22) இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (06179) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 9.30 மணிக்கு போத்​தனூரை சென்​றடை​யும். இந்த ரயில் பெரம்​பூர், அரக்​கோணம், காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர் வழி​யாக போத்​தனூரை அடை​யும்.

சென்னை எழும்​பூரில் இருந்து இன்று (ஏப்​.22) இரவு 9.55 மணிக்கு முன்​ப​தி​வில்​லாத மெமு சிறப்பு ரயில் (06161) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 8.45 மணிக்கு மதுரையை சென்​றடை​யும்.

இந்த ரயில் தாம்​பரம், செங்​கல்​பட்​டு, மேல்​மரு​வத்​தூர், விழுப்​புரம், பண்​ருட்​டி, கடலூர் துறை​முகம், சிதம்​பரம், சீர்​காழி, மயி​லாடு​துறை, பேரளம், திரு​வாரூர், நீடா​மங்​ கலம், தஞ்​சாவூர், திருச்​சி, மணப்​பாறை, திண்​டுக்​கல், கொடைக்​கானல் ரோடு வழி​யாக மதுரையை சென்​றடை​யும்.

மதுரை​யில் இருந்து ஏப்​.23-ம் தேதி பிற்​பகல் 3.30 மணிக்கு மெமு முன்​ப​தி​வில்​லாத விரைவு ரயில் (06162) புறப்​பட்​டு, அதே​நாள் இரவு 11 மணிக்கு தாம்​பரத்தை வந்​தடை​யும். இந்த ரயில் கொடைக்​கானல் ரோடு, திண்​டுக்​கல், திருச்​சிராப்பள்ளி, அரியலூர், விருத்​தாசலம், விழுப்​புரம், செங்​கல்​பட்டு வழி​யாக தாம்​பரத்தை வந்​தடை​யும்.

எழும்​பூர் - போத்​தனூர் சிறப்பு ரயிலுக்​கான (06179) டிக்​கெட் முன்​ப​திவு இன்று (ஏப்​.22) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT