தமிழகம்

2026 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 45% இலக்கை தமிழகம் எட்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் இந்​தி​யா​வின் மின்​னணு ஏற்​றும​தி​யில் 45 சதவீதத்தை 2026 நிதி​யாண்​டில் எட்​டும் என தமிழக தொழில்​துறை அமைச்​சர் டிஆர்​பி ராஜா நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய மின்​னணு தொழில்​துறை சங்​கம் (எல்​சி​னா) சார்​பில் ‘சோர்ஸ் இந்​தி​யா’ மின்​னணு விநி​யோகச் சங்​கிலி மாநாடு, சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. 2 நாட்​கள் நடை​பெறும் இம்​

          

மா​நாட்​டில் வணிக நிறு​வனங்​களுக்கு இடையே மின்​னணு உற்​பத்​தில் முக்​கிய பங்​கு​தா​ரர்களாக வகிப்​போர் பங்​கேற்​கின்றனர். மாநாட்டை தொழில்​துறை அமைச்​சர் டிஆர்​பி ராஜா தொடங்கி வைத்​து, தமிழகத்​தின் மின்​னணு தொழில் நிலை மற்​றும் வளர்ச்சி அறிக்​கை வெளி​யிட்டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மின்​னணு துறை​யில் அசெம்​பிள் பணி​களு​டன் நின்​று வி​டா​மல், உதிரி​பாகங்​கள் தயாரிப்​பு, ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு, அறி​வு​சார் சொத்​துரிமை உரு​வாக்​கத்​தில் கவனம் செலுத்​து​வதன் மூலம் 'குளோபல் சவுத்' நாடு​களுக்​கான மின்​னணு மைய​மாக தமிழகத்தை மாற்ற தமிழக அரசு நடப்​பாண்டு இலக்கு நிர்​ணயித்​துள்​ளது. கடந்த 2025-ம் நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் மொத்த மின்​னணு ஏற்​றும​தி​யில் 15 பில்​லியன் டாலராக 41 சதவீத பங்கை தமிழகம் கொண்​டிருந்​தது.

தற்​போது 2026-ம் ஆண்​டில் அது 45 சதவீத​மாக உயர வாய்ப்​புள்​ளது. 2030-க்​குள் இந்​தி​யாவின் மின்​னணு உற்​பத்தி துறை 500 பில்​லியன் டாலர் இலக்கை எட்​டும்​போது, அதில் தமிழகம் மட்டும் 150 பில்​லியன் டாலர் சந்​தை​யாக உருவெடுக்​கும். இவ்​வாறு பேசினார்.

இந்த மாநாட்​டில் பங்​கேற்ற டிக்​ஸன் டெக்​னாலஜிஸ் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் அதுல் லால் பேசும்​போது, “மத்​திய அரசின் பட்​ஜெட் ஒதுக்​கீடு மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துட​னான தாராள வர்த்தக ஒப்​பந் தங்​களால் 2030-க்​குள் 500 பில்​லியன் டாலர் இலக்கை எட்​டு​வது சாத்​தி​ய​ம்” என்றார்.

இந்​நிகழ்​வில் தொழில்​துறை செயலர் அருண் ராய், இந்​திய மின்​னணு தொழில்​துறை சங்க தலை​வர் சசிகு​மார் கெந்​தம் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT