விஜய் நாராயண்

 
தமிழகம்

அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​துக்​கான தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞ​ராக மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்​சிக்கு வந்​ததும், மூத்த வழக்​கறிஞர் ஆர்​.சண்​முகசுந்​தரம் அரசு தலைமை வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்​டார். அவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி​யில், தனிப்​பட்ட காரணங்​களுக்​காக தலைமை வழக்​கறிஞர் பதவி​யில் இருந்து வில​கி​னார்.

இதைத்​ தொடர்ந்து மூத்த வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், தலைமை வழக்​கறிஞ​ராக நியமிக்​கப்​பட்​டார். கடந்த இரு ஆண்​டு​களாக, தமிழக அரசு சார்​பில் பல்​வேறு வழக்​கு​களில் அவர் ஆஜராகி வந்​தார்.

இந்த சூழலில், தேர்​தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. இதையடுத்​து, பி.எஸ்​.​ராமன் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இந்​நிலை​யில், புதிய தலைமை வழக்​கறிஞ​ராக மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இவர், கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதி​முக ஆட்சிக் காலத்​தில் அரசு தலைமை வழக்​கறிஞ​ராக பணி​யாற்​றிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

முன்​னாள் அட்​டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோ​பாலின் உறவினர் ஆவார். விஜய் நா​ராயண் விரை​வில் புதிய தலைமை வழக்​கறிஞ​ராக பொறுப்​பேற்​க உள்​ளார்​.

SCROLL FOR NEXT