தமிழகம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ​பாலியல் வன்கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட அண்ணா நகர் சிறுமிக்கு தமிழக அரசு சார்​பில் ரூ.4 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசுத் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்​டது தொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கிய சம்​பவம் தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், இது தொடர்​பாக விசா​ரணை நடத்த சென்னை பெருநகர காவல் இணை ஆணை​யர் சரோஜ்கு​மார் தாக்​கூர் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தது. மேலும் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டுமென்​றும் அறி​வுறுத்​தி​யிருந்​தது.

அதன்​படி இழப்​பீடு கோரி சிறுமி​யின் தாயார் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே வழங்​கப்​பட்ட ரூ.1 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகை​யுடன் மேலும் ரூ.3 லட்​சத்தை இடைக்​கால நிவாரண​மாக வழங்க வேண்​டுமென தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசுத் தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, “பா​திக்​கப்​பட்ட சிறுமிக்கு இது​வரை இடைக்​கால இழப்​பீ​டாக ரூ.4 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

விசா​ரணை முடிவடைந்து குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு, சாட்சி விசா​ரணை தொடங்​கும் நிலை​யில் உள்​ளது. இது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்​டும்” என்​றார். அதையேற்ற நீதிப​தி​கள் விசா​ரணையை வரும் டிச.9-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT