தமிழகம்

பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சிஎம்டிஏ வழங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பழைய நடை​முறை​யால் ஏற்​படும் தாமதத்தை தவிர்க்க பல அடுக்​கு​மாடி கட்​டிடங்​களுக்​கான திட்ட அனு​ம​தியை சிஎம்​டிஏ வழங்​கலாம் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

சென்னை பெருநகர பகு​தி​யில் பல அடுக்​கு மாடி கட்​டிடதிட்ட அனு​ம​தியை எளிமை​யான முறை​யில் விரை​வில் பெறு​வதற்​காக, பல அடுக்​கு​மாடி திட்ட அனு​மதி வழங்​கும் அதி​காரத்தை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​துக்கு (சிஎம்​டிஏ) வழங்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அந்த அரசாணை​யில் கூறப்பட்டுள்ளதாவது: இது​வரை சிஎம்டிஏவின் பல அடுக்​கு​மாடி கட்​டிடங்​களுக்​கான திட்ட அனு​ம​திக்கு பல வழி​முறை​கள் பின்​பற்​றப்​பட்டன. கட்​டிட அனு​ம​திக்​கான விண்​ணப்​பம் அளிக்​கப்​பட்​டதும், அது கள ஆய்வு மற்​றும் கூர்ந்​தாய்வு செய்​யப்​பட்​டு, பல அடுக்​கு​மாடி கட்​டிட குழு​வுக்கு சமர்ப்​பிக்​கப்​படும்.

அந்த குழு பரிசீலனை செய்து அளிக்​கும் பரிந்​துரை​யின்​படி அரசுக்கு சமர்​ப்பித்து அரசாணை பெற்ற பிறகு பல அடுக்​கு​மாடி திட்ட அனு​மதி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், சென்னை பெருநகர பகு​தி​யில் பல அடுக்குமாடி கட்​டிட திட்ட அனு​ம​தியை எளிமை​யாக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​படி, ஏற்​கெனவே பின்​பற்​றப்​படும் நடை​முறை​யால் ஏற்​படும் கால​தாமதத்தை தவிர்க்​க​வும், இனிவரும் காலங்​களில் அபி​விருத்​தி​தா​ரருக்கு ஏற்​படும் கால தாமதத்தை குறைக்​க​வும், குறைந்த நேரத்​தில் ஒப்​புதல்​களை வழங்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கட்​டிட விதி​முறை​கள் மற்​றும் கட்​டிட விதி​களுக்கு உட்​பட்​டு, பல அடுக்​கு​மாடி கட்​டிட குழு​வின் பரிந்​துரை​ அடிப்ப​டை​யில், பல அடுக்​கு​மாடி கட்​டிடங்​களுக்​கான திட்ட அனு​ம​தியை இனி சிஎம்​டிஏ நிர்வாகமே வழங்​கலாம். இவ்​வாறு அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT